392திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  வெம்மைதான் சொல்லி நாமே வேண்டவும் - வெம்மை - விருப்பம் என்று கொண்டு, அவள் விரும்பத் தக்கனவாகிய இதமாகிய நல்ல வார்த்தைகளை எடுத்துச் சொல்லி நாமே வேண்டவும் என்று கூட்டியுரைக்க.
  வெம்மைதான் சொல்லி மறுத்தாள் - கடிய மொழிகள் கூறி மறுத்தனள் என்று கூட்டியுரைக்கவும் நின்றது; முன் "கரும மீதாக நீரிக் கடைத்தலை வருகை மற்றும் பெருமைக்குத் தகுவ தன்றால்....நீரும்போம்" (3499) என்றது. தான் - வெம்மை தானேயன்றி வேறில்லை.
  நாமே வேண்டவும் - ஏகாரம் உயர்வு குறித்த பிரிநிலை; வேண்டவும் - உம்மை உயர்வு சிறப்பு; வேண்டிய தன்மை; "நுன்னையான் வேண்டிக் கொண்டதாதலின் மறுத்தல் செய்ய வடாது" (3498) என்று முன் கூறியது.
  திறமெலாம் கூற - "நம்பி செய்த ஏதங்கள் மனத்துக் கொள்ளா தெய்திய வெகுளி நீங்கி, நோதக வொழித்தற்கு" (3498) என்றது.
 

352

3507
ண்ணலா ரருளிச் செய்யக் கேட்டவா ரூரர் தாமுந்
துண்ணென நடுக்க முற்றே தொழுது"நீ ரருளிச் செய்த
வண்ணமு மடியா ளான பரவையே மறுப்பாள்? நாங்கள்
எண்ணலா ரடிமைக் கென்ப தின்றறி வித்தீ" ரென்று,
 

353

3508
வானவ ருய்ய வேண்டி மறிகட னஞ்சை யுண்டீர்
தானவர் புரங்கள் வேவ மூவரைத் தவிர்த்தாட் கொண்டீர்
நான்மறைச் சிறுவர்க் காகக் காலனைக் காய்ந்து நட்டீர்
யான்மிகை யுமக்கின் றானா லென்செய்வீர் போதா? தென்றார்.
 

354

  3507. (இ-ள்) அண்ணலார்......தொழுது - முன்கூறியவாறு இறைவனார் அருளிச் செய்ததனைக் கேட்ட நம்பியாரூரரும் துண்ணென்று நடுக்கமுற்று அவரை வணங்கி; நீர்.....மறுப்பாள் - தேவரீர் அருளிச் செய்த தன்மையினையும் உமது அடியாளாகிய பரவையே மறுக்கவல்லவள்?; நாங்கள்....என்று - நாங்கள் அடிமைத் திறத்தின் வைத்து எண்ணுதற்கு உரியரல்லோம் என்பதனை இன்று அறியச் செய்தீர் என்று கூறி,
 

353

  3508. (இ-ள்) வானவர்.....உண்டீர் - தேவர்கள் உய்யும் பொருட்டு அலைகடலில் எழுந்த பெருவிடத்தினை உண்டீர்; தானவர்....ஆட்கொண்டீர் - அசுரர்களது முப்புரங்களும் எரிந்து போக அவற்றுள் இருந்த அடியவர்களான மூவர்களை மட்டும் வேவாது தவிர்த்து ஆட்கொண்டீர்; நான்மறை...நட்டீர் - நான்மறை வல்ல சிறுவராகிய மார்க்கண்டேயரைக் காக்கும் பொருட்டுக் கூற்றுவனை உதைத்து (அவ்வந்தணனை) அடிமை கொண்டீர்; யான்மிசை......என்றார் - இத்தன்மையுடைய பெருங்கருணையாளராகிய உமக்கு நான் இன்று மிகையானால் மீண்டு வாராது வேறென் செய்வீர்? என்றார்.
 

354

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3507. (வி-ரை) துண்ணென நடுக்க மெய்தி - உறுதி செய்தணைந்தாரென்றே கொண்டு எய்திய முன்கூறிய மகிழ்ச்சியெல்லாம் உடனே மாறி அதிவிரைவில் மெய்ந் நடுக்கமுற்று.
  நீர்......மறுப்பாள் - தலைவராகிய நீர் சொன்ன கட்டளையை அடியாளாகிய பரவையோ மறுக்க வல்லவள்? ஏகார வினா வல்லளல்லள் என்று எதிர் மறை