394திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

3509
"ஆவதே செய்தீ ரின்றென் னடிமைநீர் வேண்டா விட்டால்
பாவியேன் றன்னை யன்று வலியவாட் கொண்ட பற்றென்?
நோவுமென் னழிவுங் கண்டீர் நுடங்கிடை யவள்பா லின்று
மேவுதல் செய்யீ ராகில் விடுமுயி" ரென்று வீழ்ந்தார்.
 

355

  (இ-ள்) ஆவதே செய்தீர் - தகுதியாவதே செய்தீர்; இன்று....பற்று என்? - இன்று எனது அடிமையைத் தேவரீர் விரும்பாவிட்டால் அடிமைக்கு எண்ணவாராத பாவியேனாகிய என்னை அன்று நான் மறுப்பவும் திருவெண்ணெய் நல்லூரில் வைத்து வலிய ஆளாக்கொண்ட பற்று எதற்காக; நோவும்....கண்டீர் - எனது வருத்தத்தினையும் மனம் நைதலையும் கண்டுள்ளீர்; நுடங்கு.....உயிர் என்று - துவளும் இடையினையுடைய பரவையிடத்தில் இன்றே நான் சென்று சேரும்படி செய்யீராகில் உயிர் விடும் என்று சொல்லி; வீழ்ந்தார் - திருவடியில் வீழ்ந்தனர்.
  (வி-ரை) ஆவதே செய்தீர் - வருத்தமிகுதியால் எதிர்மறைப் பொருட்குறிப்புடன் வந்த இகழ்ச்சிக் குறிப்பு வழக்கு.
  இன்று வேண்டா விட்டால் - அன்று வலிய ஆட்கொண்ட பற்று என்?- அன்று வலிந்து ஈர்த்து ஆட்கொண்ட நீர் இன்று ஆளாக எண்ணாது கைவிடுதல் நீதியன்று என்பது; நீதியன்று என்பது குறிப்பெச்சம்.
  நோவும்என் அறிவும் - நோ - வருத்தம்; அழிவு - அது காரணமாக வருவது; கண்டீர் - கண்கூடாக நேரில் அறிந்துள்ளீர்.
  மேவுதல் செய்யீராகில் - மேவுதல் - நான் மேவும்படி; மேவுவித்தலை; செய்தல் - நிலையினை உளதாக்குதல்; இன்று - இன்றே; ஏகாரம் தொக்கது.
  உயிர்விடும் - என்க; முன்பின்னாக வந்தது விரைவுக் குறிப்பு; விடுப்பேன் என்னாது விடும் - என்றது எனது முயற்சியின்றி உயிர் தானே நீங்கிவிடும் என்றதாம்.
  வீழ்ந்தார் - நிற்கலாற்றாது தளர்ந்து அவரது திருவடியில் வீழ்ந்தனர். வரும் பாட்டைப் பார்க்க.
  என்றன் அடிமை - இன்னம் மேவுதல் - என்பனவும் பாடங்கள்.
 

355

3510
ம்பிரா னதனைக் கண்டு தரியாது தளர்ந்து வீழ்ந்த
நம்பியை யருளா னோக்கி,"நாமின்ன மவள்பாற் போயக்
கொம்பினை யிப்போ தேநீ குறுகுமா கூறு கின்றோம்
வெம்புறு துயர்நீங்" சென்றார் வினையெலாம் விளைக்க வல்லார்.
 

354

  (இ-ள்) தம்பிரான்....நோக்கி - தம்பிரானார் அதனைக் கண்டு அவ்வாறு தரிக்கலாற்றாது தளர்ச்சியினால் தம் அடிக்கீழ் வீழ்ந்த நம்பிகளை அருளாலே நோக்கி; "நாம்....நீங்கு" என்றார் - நாம் மீண்டும் ஒருமுறை அவளிடம் தூதுபோய் அந்தக் கொம்பு போன்ற பரவையை நீ இப்போதே சென்று அடையும்படி சொல்கின்றோம்; உன்னை வருத்துகின்ற துன்பத்தினை நீங்குவாயாக! என்றருளினர்; வினையெலாம் விளைக்க வல்லார் - விளைப்பயன்களை யெல்லாம் அவ்வவ்வுயிர்கள் பாற் கூட்டுவிக்க வல்ல எம்பெருமானார்.
  (வி-ரை) தரியாது....நம்பி - முன்பாட்டில் "வீழ்ந்தார்" என்றதனை விளக்கியவாறு.
  அருளால் நோக்கி - அருட்பார்வை செய்து; அஃது இடர்நீக்கி உய்விக்கும் பார்வை.