|
  | 3509 |                       | "ஆவதே செய்தீ ரின்றென் னடிமைநீர் வேண்டா         விட்டால் பாவியேன் றன்னை யன்று வலியவாட் கொண்ட பற்றென்?
 நோவுமென் னழிவுங் கண்டீர் நுடங்கிடை யவள்பா லின்று
 மேவுதல் செய்யீ ராகில் விடுமுயி" ரென்று வீழ்ந்தார்.
 |  | 
  |  | 355 | 
  |  | (இ-ள்) ஆவதே செய்தீர் - தகுதியாவதே செய்தீர்; இன்று....பற்று என்? - இன்று எனது   அடிமையைத் தேவரீர் விரும்பாவிட்டால் அடிமைக்கு எண்ணவாராத பாவியேனாகிய என்னை அன்று நான்   மறுப்பவும் திருவெண்ணெய் நல்லூரில் வைத்து வலிய ஆளாக்கொண்ட பற்று எதற்காக; நோவும்....கண்டீர்   - எனது வருத்தத்தினையும் மனம் நைதலையும் கண்டுள்ளீர்; நுடங்கு.....உயிர் என்று - துவளும்   இடையினையுடைய பரவையிடத்தில் இன்றே நான் சென்று சேரும்படி செய்யீராகில் உயிர் விடும் என்று   சொல்லி; வீழ்ந்தார் - திருவடியில் வீழ்ந்தனர். | 
  |  | (வி-ரை) ஆவதே செய்தீர் - வருத்தமிகுதியால் எதிர்மறைப் பொருட்குறிப்புடன் வந்த   இகழ்ச்சிக் குறிப்பு வழக்கு. | 
  |  | இன்று வேண்டா விட்டால் - அன்று வலிய ஆட்கொண்ட பற்று என்?- அன்று வலிந்து ஈர்த்து   ஆட்கொண்ட நீர் இன்று ஆளாக எண்ணாது கைவிடுதல் நீதியன்று என்பது; நீதியன்று என்பது   குறிப்பெச்சம். | 
  |  | நோவும்என் அறிவும் - நோ - வருத்தம்; அழிவு - அது காரணமாக வருவது; கண்டீர்   - கண்கூடாக நேரில் அறிந்துள்ளீர். | 
  |  | மேவுதல் செய்யீராகில் - மேவுதல் - நான் மேவும்படி; மேவுவித்தலை; செய்தல்   - நிலையினை உளதாக்குதல்; இன்று - இன்றே; ஏகாரம் தொக்கது. | 
  |  | உயிர்விடும் - என்க; முன்பின்னாக வந்தது விரைவுக் குறிப்பு; விடுப்பேன் என்னாது   விடும் - என்றது எனது முயற்சியின்றி உயிர் தானே நீங்கிவிடும் என்றதாம். | 
  |  | வீழ்ந்தார் - நிற்கலாற்றாது தளர்ந்து அவரது திருவடியில் வீழ்ந்தனர். வரும் பாட்டைப்   பார்க்க. | 
  |  | என்றன் அடிமை - இன்னம் மேவுதல் - என்பனவும் பாடங்கள். | 
  |  | 355 | 
  | 3510 |                       | தம்பிரா னதனைக் கண்டு தரியாது தளர்ந்து         வீழ்ந்த நம்பியை யருளா னோக்கி,"நாமின்ன மவள்பாற் போயக்
 கொம்பினை யிப்போ தேநீ குறுகுமா கூறு கின்றோம்
 வெம்புறு துயர்நீங்" சென்றார் வினையெலாம் விளைக்க வல்லார்.
 |  | 
  |  | 354 | 
  |  | (இ-ள்) தம்பிரான்....நோக்கி - தம்பிரானார் அதனைக் கண்டு அவ்வாறு தரிக்கலாற்றாது   தளர்ச்சியினால் தம் அடிக்கீழ் வீழ்ந்த நம்பிகளை அருளாலே நோக்கி; "நாம்....நீங்கு"   என்றார் - நாம் மீண்டும் ஒருமுறை அவளிடம் தூதுபோய் அந்தக் கொம்பு போன்ற பரவையை நீ இப்போதே   சென்று அடையும்படி சொல்கின்றோம்; உன்னை வருத்துகின்ற துன்பத்தினை நீங்குவாயாக! என்றருளினர்;   வினையெலாம் விளைக்க வல்லார் - விளைப்பயன்களை யெல்லாம் அவ்வவ்வுயிர்கள் பாற் கூட்டுவிக்க   வல்ல எம்பெருமானார். | 
  |  | (வி-ரை) தரியாது....நம்பி - முன்பாட்டில் "வீழ்ந்தார்" என்றதனை விளக்கியவாறு. | 
  |  | அருளால் நோக்கி - அருட்பார்வை செய்து; அஃது இடர்நீக்கி உய்விக்கும் பார்வை. |