[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்395

  இன்னம் - மேலும் ஒருமுறை; குறுகுமா - குறுகும்படி; ஆறு என்பது ஈறுதொக்கு என நின்றது.
  வெம்புறு துயர் - உள் வெதும்புதலினால் உளதாகும் துன்பம்.
  வினை எலாம் விளைக்க வல்லார் - முன்னர் "வெம்புறு வேட்கை காணும் திருவிளையாட்டின் மேவி" (3500) என்றதனுள் விளையாட்டாவது அவ்வவரும் தத்தம் வினைப்பயன்களை அவ்வவரே துய்க்கும்படி செய்து பார்த்திருத்தல்; அரனது விளையாட்டாவது வினையை விளைவித்தலே - அனுபவிக்கச் செய்து பார்த்திருத்தலே - யாம் என்பது. "வல்லார்கள் வல்ல வகையாற் றொழில்புரித, லெல்லா முடனே யொருங்கிசைந்து - செல்காலை; முட்டாமற் செய்வினைக்கு முற்செய்வினைக்குஞ் செலவு, பட்டோலை தீட்டும் படிபோற்றி....அல்ல லுறுத்து மருஈரகங் கண்டுநிற்க, வல்ல கருணை மறம்போற்றி - பல்லுயிர்க்கும்; இன்ன வகையாலிருவினைக ணின்றருத்தி, முன்னைமுத லென்ன முதலில்லோ-னல்வினைக்கண்; எல்லா வுலகு மெடுப்புண் டெடுப்புண்டு, செல்காலம் பின்னரகஞ் சோரமே, - நல்லநெறி, யெய்துவதோர் காலந்தன் னன்பரைக்கண் டின்புறுதல், உய்வுநெறி சிறிதே யுண்டாக்கி...." (போற்றிப்பஃறொடை) என்றற் றொடக்கத்த திருவாக்குக்கள் காண்க. இறைவர் வினையெலாம் விளைக்கும் தன்மைபற்றி மேலும் மெய்கண்ட ஞானநூல்களுட் கண்டுகொள்க.
  வினை வல்லார் - முன்முறை செயல் முற்றுப்பெறாமையின் காரணக் குறிப்பு.
  கூடுமா கூறுகின்றோம் - என்பதும் பாடம்.
 

356

3511
யங்கிய நண்ப ருய்ய வாக்கெனு மதுர வாய்மை
நயங்கிள ரமுத நல்க நாவலூர் மன்னர் தாமும்
"உயங்கிய கலக்க நீக்கி யும்மடித் தொழும்ப னேனைப்
பயங்கெடுத் திவ்வா றன்றோ பணிகொள்வ"தென்றுபோற்ற,
 

357

3512
ன்பர்மேற் கருணை கூர வாண்டவர் மீண்டுஞ் செல்லப்
பின்புசென் றிறைஞ்சி நம்பி பேதுற லோடு மீண்டார்;
முன்புடன் போதா தாரு முறைமையிற் சேவித் தேகப்
பொன்புரி சடையார் மாதர் புனிதமா ளிகையிற் சென்றார்.
 

358

  3511. (இ-ள்) மயங்கிய...நல்க - தெளிவுறாது மயக்கமுற்ற நண்பராகிய நம்பிகள் உய்யும் பொருட்டுத் தமது திருவாக்காகிய இனிமையும் உண்மையும் இன்பமும் பொருந்திய அமுதத்தினை இவ்வாறு அருளியிட; நாவலூர் மன்னர் தாமும் - திருநாவலூரர் பெருமானாகிய நம்பிகளும்; உயங்கிய....என்ற போற்ற - வருத்தம் விளைத்த கலக்கத்தினை நீக்கி உமது திருவடித் தொண்டனாகிய என்னை அச்சம் கெடுத்து இப்படி யன்றோ தொண்டு கொள்வது! என்று துதிக்க,
 

357

  3512 (இ-ள்) அன்பர்....செல்ல - அன்பர்பாற் கருணை பெருக இறைவனார் இவ்வாறு மீளவும் செல்வாராக; பின்பு சென்று....மீண்டார் - அவர் பின்னே சிறிது தூரம் சென்று வணங்கி நம்பிகள் மயக்கத்தோடு மீண்டனர்; முன்பு....ஏக - முன் முறையிலே உடன் செல்லாதவர்களும் முறைமைப்படி சேவித்துப் பின்செல்ல; பொன்புரி....சென்றார் - பொன்போன்று ஒளிவிளங்குகின்ற புரித்த சடையினையுடைய இறைவரும் பரவையாரது தூய திருமாளிகையிற் சென்றருளினர்.
 

358

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.