406திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  (வி-ரை) ஆவி அளிக்கும்படி - "அவள்பால் இன்று மேவுதல் செய்யீராகில் விடுமுயிர்" (3509) என்றபடி நீங்கும் "நிலையிலிருந்த உயிரினைத் தரும்படி; ஆவி - ஆவி போன்ற பரவையை என்ற குறிப்புப்பட உரைத்தலும் ஆம்; என்பால் - என்பாற் பொருந்த; "என்னின் னுயிரா மன்னமென" (297); "ஆவி நல்குவ ராரூரை யாண்டவர், பூவின் மங்கையைத் தந்தெனும்" (302) என்று முன் கூறிய கருத்துக்கள் காண்க; மேற்பாட்டிலும் "உயிர் நல்கும்" (3525) என்பதும் காண்க.
  இன்னமும் என் செய்து மீள்வாரோ? என்க; இன்னமும் - முன்னர்ச் சென்ற காரியம் நிறைவு செய்யாது மீண்டமை போல இன்னமும் என உம்மை இறந்தது தழுவிற்று; என் செய்து - நிறைவு செய்வதும் அது செய்யாமையும் அவர் செயலே யன்றி மற்றும் உயிர்களின் செயலாவது ஒன்றுமில்லை என்பதும் குறிப்பு.
  இடர் கூர - கூர்தல் - மிகுதல்; கூர - கூர்தலினால்; கூர - நேரும் கண்ணிணை-முகிழார்-எனக் காரணப் பொருளில் வந்தது.
  வீதி முன்புற நேரும் கண்ணிணை - தானும் முகிழார் - வீதியினை எதிர் நோக்கிய வண்ணம் பார்த்த கண்கள் இமையாராயினர்; முன்புற நேரும் - இறைவரது வரவினை எதிர்நோக்கும்.
  தானும் - உம்மை முற்றும்மை; சிறப்பும்மையுமாம்; மனம் இடர்கூர வருந்துதலோடு கண் தானும் என்றலுமாம். முகிழ்த்தல் - இமைத்தல் - மூடுதல்.
  முகிழாதால் - என்பதும் பாடம்.
 

370

3525
ந்நிலை மைக்கண் மன்மதன் வாளிக் கழிவார்தம்
மன்னுயிர் நல்குந் தம்பெரு மானார் வந்தெய்த
முன்னெதிர் சென்றே மூவுல குஞ்சென் றடையுந்தாள்
சென்னியில் வைத்"தென் சொல்லுவ" ரென்றே தெளியாதார்,
 

371

3526
"எம்பெரு மானீ! ரென்னுயிர் காவா திடர்செய்யுங்
கொம்பனை யாள்பா லென்கொடு வந்தீர் குறை?" யென்னத்,
தம்பெரு மானுந்"தாழ்குழல் செற்றந் தணிவித்தோம்;
நம்பி யினிப்போய் மற்றவ டன்பா னணு" கென்ன,
 

372

3527
ந்தி பிரானார் வந்தருள் செய்ய நலமெய்துஞ்
சிந்தையு ளார்வங் கூர்களி யெய்தித் திகழ்கின்றார்
"பந்தமும் வீடும நீரருள் செய்யும் படிசெய்தீர்
எந்தை பிரானே! யென்னினி யென்பா லிடர்?"என்றார்.
 

373

  3525. (இ-ள்) அந்நிலைமைக் கண்....எய்த - (நம்பிகள்) அந்நிலையில் நின்ற போது மன்மதனது அம்புகள் வீழ இடைந்த நம்பிகளது நிலை பெற்ற உயிரினைத் தந்தருளும் தமது பெருமானார் வந்து சேர; முன் எதிர்....வைத்து - அவர் திரு முன்பு எதிர்கொண்டு சென்றே மூவுலகங்களும் சென்று அடையும் அவரது திருவடிகளைச் சிரத்தில் வைத்துப் பணிந்து; என்......தெளியாதார் - என்ன சொல்வார் என்றே தெளியாதாராகி,
 

371