[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்47

தரும் திருப்பதிகத்தினைப் பாடி; அருள்....போந்தார் - திருவருளினைப் பெற்று உடனே சென்றருளினர்.

53

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன.
3206. (வி-ரை) புறம் - திருக்கோயிலின் புறம்பு.
எதிரில்....தருவார் - திருப்புகலூரிறைவர். திருப்பதிகக் கருத்துப் போற்றப்பட்டது. எதிரில் - இணையில்லாத. அருள் பெற்று - அருள் விடை பெற்று.
நிதியின் குவை - செம்பொற் கட்டிகள். குவை - திரட்சி - திரண்ட கட்டிகள்; குவி - பகுதி.
நிறையும் நதி - குறைமதி - முரண் அணி; நிறைவாய்ப் பெருகி வந்த நதியைச் சிறுகச் செய்தும், குறைந்து வந்த மதியைப் பெருகச் செய்தும் அருளிய எல்லாம் வல்லவர் என்பது குறிப்பு.
பொதிதல் - நெருங்கியிடம்பெறச் செருகி வைத்தல்.
மார்பர் புகுவார் - புகுவார் - புகுவாராகி; எதிர் சென்று என்று மேல் வரும் பாட்டுடன் முடிக்க.
புரிநூல் மணி மார்பர் - நூலும் மணி வடங்களும் பூண்ட மார்பர் உம்மைத் தொகை; வைதிகத் திருவும் மன்னவர் திருவும் உடையவர். தடுத்தாட்கொண்ட புராணம் பார்க்க. மணி - அழகுடைய என்றலுமாம்.
திருப்பனையூர் புகுவார் - திருப்புகலூரினின்றும் திருவாரூருக்கு வருமிடையில் உள்ளது திருப்பனையூர். திருவாரூர் செல்லும் சாலைக்கு இதன் வழியாய்ச் செல்வது சுருங்கிய வழியாதலின் புகுவார் என்றார். புகுதல் - ஊர்ப்புற எல்லையினைச் சார்தல்.

52

3207. (வி-ரை) புறத்து - ஊர் எல்லைப் புறத்தில்.
திருக்கூத்தொடும் காட்சி எய்த அருள - ஆனந்தக் கூத்தாடிக் காட்சி தர.
அங்கு - காட்சி தரக்கண்ட அவ்விடத்தே; ஊர்எல்லைப்புறத்தே.
அரங்காட வல்லார் அவரே அழகியரே - பதிகக் கருத்துக்காட்டுமாறு; பாட்டுத்தோறும் வரும் முடிபுகளின் குறிப்புப் பார்க்க. முதற் பாட்டு முடிபு பார்க்க.
உலகு உய்யப் பெறும் பதிகம் என்க. உய்யப் பெறுதலாவது உறுதிப் பொருளை இதனால் உபதேசிக்கப் பெற்று உய்யும் வழி பெறுதல்.
ஐயரரங்கிலாமோ - என்பதும் பாடம்.

53

திருப்பனையூர்
திருச்சிற்றம்பலம்

பண் - சீகாமரம்

மாடமாளிகை கோபு ரத்தொடு மண்ட பம்வள ரும்வளர் பொழிற்
பாடல்வண் டறையும் பழனத் திருப்பனையூர்த்
தோடு பெய்தொரு காதி னிற்குழை தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின்
றாடு மாறுவல்லா ரவரே யழகியரே.

(1)

வஞ்சி நுண்ணிடை மங்கை பங்கினர் மாத வர்வள ரும்வளர் பொழிற்
பஞ்சின் மெல்லடியார் பயிலுந் திருப்பனையூர்
வஞ்சி யும்வளர் நாவ லூரன் வனப்பகை யப்பன் வன்றொண்டன்
செஞ்சொற் கேட்டுகப்பா ரவரே யழகியரே.

(11)

திருச்சிற்றம்பலம்