| |
| தரும் திருப்பதிகத்தினைப் பாடி; அருள்....போந்தார் - திருவருளினைப் பெற்று உடனே சென்றருளினர். |
| 53 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன. |
| 3206. (வி-ரை) புறம் - திருக்கோயிலின் புறம்பு. | | எதிரில்....தருவார் - திருப்புகலூரிறைவர். திருப்பதிகக் கருத்துப் போற்றப்பட்டது. எதிரில் - இணையில்லாத. அருள் பெற்று - அருள் விடை பெற்று. |
| நிதியின் குவை - செம்பொற் கட்டிகள். குவை - திரட்சி - திரண்ட கட்டிகள்; குவி - பகுதி. |
| நிறையும் நதி - குறைமதி - முரண் அணி; நிறைவாய்ப் பெருகி வந்த நதியைச் சிறுகச் செய்தும், குறைந்து வந்த மதியைப் பெருகச் செய்தும் அருளிய எல்லாம் வல்லவர் என்பது குறிப்பு. |
| பொதிதல் - நெருங்கியிடம்பெறச் செருகி வைத்தல். |
| மார்பர் புகுவார் - புகுவார் - புகுவாராகி; எதிர் சென்று என்று மேல் வரும் பாட்டுடன் முடிக்க. |
| புரிநூல் மணி மார்பர் - நூலும் மணி வடங்களும் பூண்ட மார்பர் உம்மைத் தொகை; வைதிகத் திருவும் மன்னவர் திருவும் உடையவர். தடுத்தாட்கொண்ட புராணம் பார்க்க. மணி - அழகுடைய என்றலுமாம். |
| திருப்பனையூர் புகுவார் - திருப்புகலூரினின்றும் திருவாரூருக்கு வருமிடையில் உள்ளது திருப்பனையூர். திருவாரூர் செல்லும் சாலைக்கு இதன் வழியாய்ச் செல்வது சுருங்கிய வழியாதலின் புகுவார் என்றார். புகுதல் - ஊர்ப்புற எல்லையினைச் சார்தல். |
| 52 |
| 3207. (வி-ரை) புறத்து - ஊர் எல்லைப் புறத்தில். |
| திருக்கூத்தொடும் காட்சி எய்த அருள - ஆனந்தக் கூத்தாடிக் காட்சி தர. |
| அங்கு - காட்சி தரக்கண்ட அவ்விடத்தே; ஊர்எல்லைப்புறத்தே. |
| அரங்காட வல்லார் அவரே அழகியரே - பதிகக் கருத்துக்காட்டுமாறு; பாட்டுத்தோறும் வரும் முடிபுகளின் குறிப்புப் பார்க்க. முதற் பாட்டு முடிபு பார்க்க. |
| உலகு உய்யப் பெறும் பதிகம் என்க. உய்யப் பெறுதலாவது உறுதிப் பொருளை இதனால் உபதேசிக்கப் பெற்று உய்யும் வழி பெறுதல். |
| ஐயரரங்கிலாமோ - என்பதும் பாடம். |
| 53 |
| திருப்பனையூர் |
| திருச்சிற்றம்பலம் | பண் - சீகாமரம் |
| மாடமாளிகை கோபு ரத்தொடு மண்ட பம்வள ரும்வளர் பொழிற் பாடல்வண் டறையும் பழனத் திருப்பனையூர்த் தோடு பெய்தொரு காதி னிற்குழை தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின் றாடு மாறுவல்லா ரவரே யழகியரே. | |
| (1) |
| வஞ்சி நுண்ணிடை மங்கை பங்கினர் மாத வர்வள ரும்வளர் பொழிற் பஞ்சின் மெல்லடியார் பயிலுந் திருப்பனையூர் வஞ்சி யும்வளர் நாவ லூரன் வனப்பகை யப்பன் வன்றொண்டன் செஞ்சொற் கேட்டுகப்பா ரவரே யழகியரே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |