|
  |  | முதற்பெருநாயகம் - "கோயில் நாயகன்" (20); நாயகமாவது காவலாகிய அதிகாரம். | 
  |  | நெறியருளும் - இஃது உட்செல்ல விடுக்கும் காலம் என்றும், இஃது அவ்வாறு செல்ல விடாத   காலம் என்றும், இவ்வழி செல்க - இவ்வழி செல்லற்க என்றும் காலமும் இடமும் காட்டி விடுத்தும்   தடுத்தும் வழிப்படுத்தும். நெறி - சிவநெறி, குரு நெறி, ஒளிநெறி, நன்னெறி என்றலுமாம்;   இப்பொருளில் முனிவர் யோகியர்க்கே யன்றி இமையவர்க்கும் என்று எச்சவும்மை தொக்க   தென்க. | 
  |  | நந்தி - திருநந்தி தேவர்; நந்தி - சிவபெருமானது பெயர்; அவர்பால் முதல்   உபதேசம் பெற்ற நந்திதேவருக்கு ஆயிற்று; முதற்பெருநாயகமாகி - நெறியருளும் - நந்தி - என்பன   இறைவராகிய நந்தியினின்றும் பிரித்துணர வைக்கும் அடைமொழிகள். பிறிதினியையு நீக்கிய   விசேடணம். | 
  |  | நந்தி திருவருள் பெற்ற - நந்தி பெருமான்பால் நேரே உபதேசம் பெற்ற என்க. "நந்தி   யருள்பெற்ற நாதரை நாடிடின், நந்திக ணால்வர் சிவயோக மாமுனி, மன்று தொழுத பதஞ்சலி   வியாக்கிரம, ரென்றிவ ரென்னோ டெண்மரு மாமே", "இருந்தேனென் னந்தி யிணையடிக்   கீழே" (திருமந்திரம் - பாயிரம்) என்பன முதலியவை பார்க்க. | 
  |  | நான்மறை யோகிகள் - வேத சிவாகமங்களுள் பேசப்பட்ட சிவயோகங்கைவந்த பெரியார்.   பன்மை சிறப்பு; இவரது சிவயோக சாதனையால் வரும் இச்சரித நிகழ்ச்சிகள் பலவும் காண்க. "எண்ணிறைந்த   வுணர்வுடையா ரீசரருளென வுணர்ந்தார்" (3586); "சிவயோகந் தலைநின்று, பூவலரு மிதயத்துப்   பொருளோடும் புணர்ந்திருந்தார்" (3588) என்பன முதலியனவாய் வருவன காண்க; யோகிகளுள்   ஒருவர் என்றுரைப்பாருமுண்டு; ஒருவர் - ஒப்பற்றவர் என்ற குறிப்புமாம்; இவரது   முன்னைப் பெயர் சொல்லப்படவில்லை. ஈண்டைக்கு வேண்டப் படாமை குறிப்புப் போலும். அவையெல்லாம்   கண்டு சரிதங் காண்பாருமுண்டு. | 
  |  | இப்புராணம் அந்தி என்று அகரத்தில் தொடங்கிச் சாற்றுவாம் என மகர ஒற்றுடன்   நிறைவாதல் பிரணவ வடிவான ஞானம் தரவந்தவரது சரிதம் என்ற குறிப்புத்தருவது. | 
  |  | 1 | 
  |  | 3565. (வி-ரை) அணிமாதி வருஞ் சித்தி - அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி,   பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்ற எண்வகைச் சித்திகள். இவை அட்டமாசித்திகள்   எனப்படும்; .அணிமா - அணுவினுஞ் சிறிய உருவம் கொள்ளுதல்; மகிமா - எங்கும் நிறைந்து   நிற்கும் பெருமை கொள்ளுதல்; லகிமா - மேருப்போல மிகப் பெரிதாயிருந்தும் எடுக்கும்போது   இலகுவாயிருத்தல்; கரிமா - அணுப்போலிருந்தும் எடுக்குங்கால் மேருப் போலக் கனப்பது;  பிராத்தி - எங்கும் செல்லும் ஆற்றலுடைமை; பிராகாமியம் - பரகாயத்தில்   நண்ணுதல், ஆகாயத்தில் சஞ்சரித்தல், நினைந்த போகங்கள் எல்லாம் தானிருந்த இடத்தே வரப்பெறுதல்,   தன் உடல் ஒளியினாலே இருந்தபடியே மண்ணிலும் விண்ணிலும் உள்ள பொருள்களெல்லாமும் கால மூன்றும்   அறிதல்; ஈசத்துவம் - ஈசனென முத்தொழிலும் செய்து தேவரும் பணிகேட்ப நிற்றல்;   வசித்துவம் - எவ்வுயிரையும் தன் வசமாக்குதல்; இவற்றினியல்பைத் திருவிளையாடற் புராணம்   அட்டமாசித்தி யுபதேசித்த படலம் முதலியவற்றுளும் இவரது திருமந்திரத்துள்ளும் காண்க. | 
  |  | வருஞ்சித்தி - சிவயோகியர்கள் இவற்றை விரும்பார்; ஆயினும் அவர்களை இவை நிழல்போலப்   பிரியாது அடைந்து அவர்களது பெருமைகளை உலகர்க்கு |