| |
| கள் பலவற்றையும் சென்று வணங்கி; சிந்தை...காவலனார் - மனமகிழ மிக விருப்பத்தோடும் தேவர் பெருமானாகிய புற்றிடங்கொண்ட பெருமானது திருவாரூரினை முற்பட வணங்கி முனைப்பாடி நாட்டவர்களின் தலைவராகிய நம்பியாரூரர் இனிதாக எழுந்தருளியிருந்தனர். |
| 55 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்கநின்றன. உவந்தணைந்தார் (54) என்பது பாடமாயின் தனிமுடிபுகளாக உரைத்துக் கொள்க. | | 3208. (வி-ரை) இட்டிகை - செங்கல். பொன் இட்டிகைகள் - செங்கல் வடிவமைந்த செம்பொற் கட்டிகள். |
| ஆள்மேல்.....புக - ஏவலாட்கள் தாங்கிச் சென்று பரவையார் திருமாளிகையினுள் சென்று சேர்க்க. பொற்கட்டிகளின் மிக்க கனத்தால் ஆள்மேல் என்றார். |
| தாமும்...உவந்தணைவார் - தாம் அவர்களுடன் நேரே திருமாளிகையிற் செல்லாது தமது உள நிறைந்த இறைவரைச் சென்று வணங்கிய பின்னரே அங்குச் சென்றருளுவார். இம்மரபு பற்றி முன்னர்ப் பலவிடத்தும் உரைக்கப்பட்டது; பின்னும் கண்டு கொள்க; இதனை உலகர் உள்ளங்கொண்டு ஒழுகும் பொருட்டு ஆசிரியர் அங்கங்கும் வற்புறுத்தி எடுத்துக் காட்டி யருளுதல் வழக்கு. |
| உளமன்னிய - தமது உள்ளத்தைவிட்டு நீங்காது, என்றும் எண்ணத்தில் நிலைபெறக் கொண்டிருக்கின்ற. |
| தாமும் - அணைவார் - ஆட்கள் புகுத அதன்பின் தாமும் என்ற இறந்ததுதழுவிய எச்ச உம்மை. |
| தம்பெருமானார் தம்மை - தம் - இருமுறை வந்தது இருபாலும் ஒட்டி நிகழும் தன்மை குறித்ததற்கு. |
| உவந்தணைவார் - வந்து - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. அணைவார் - அணைவாராகி; முற்றெச்சம். |
| 3209. (வி-ரை) பரவைப் பிராட்டியார் மகிழ வைகி - மகிழ்ச்சியாவது செம்பொன்னைத்திருப்பங்குனி உத்தர விழாவிற் பல வகையாலும் கொடை நேர்ந்து அடியார்க் களித்தனால் ஆயது. |
| ஆரூர் மருங்கு அணிய கோயில்கள் பலவும் - முன் உரைக்கப்பட்டன. இவை எண்ணிறந்தவை உள்ளன; |
| தெய்வப் பெருமாள் - தேவதேவர்; தேவர்கள் வந்து முறையிருந்து வழிபடும் சிறப்புக் குறித்தது; திருக்கூட்டச் சிறப்புப் பார்க்க. |
| திருவாரூர் முந்தி வணங்கி - திருவாரூரினை நாளும் வணங்கிப் பின் அணிய கோயில்களைச் சென்று வணங்கி மீண்டு திருவாரூரிற் சேர்ந்தவாறே, ஒரு நாளும் திருவாரூரை விட்டு நீங்கி அகலாது இனிதமர்ந்தார் என்பதாம். |
| முனைப்பாடியர்தம் காவலனார் - திருமுனைப்பாடி நாட்டினரது தலைவர் என்று நம்பிகளது திருவவதாரம் பற்றி உரைத்தார்; திருவாரூரில் மகிழ்ந்திருப்பது தமது உலகத் தொடர்பன்றி அதனின்றும் சிறந்த உயிர்த் தொடர்பு பற்றி என்பதறிவித்தற்கு. |
| 55 |
3210 | பலநா ளமர்வார் பரமர் திரு வருளா லங்கு நின்றும்போய்ச் சிலைமா மேரு வீரனார் திருநன் னிலத்துச சென்றெய்தி வலமா வந்து கோயிலினுள் வணங்கி மகிழ்ந்து பாடினார் தலமார் கின்ற "தண்ணியல்வெம் மை"யினா னென்னுந்தமிழ்மாலை. | |
| 56 |