| |
| வழங்கும் பலவற்றுள் ஒன்றாகிய அளவிற் கொள்ளத் தக்கதாகும். - ஊரும் பண்பும் பேரும் தொகைநூல் உணர்த்திற்று. மாறனுக்கும் - முன் அடிமைப்பட்ட பெரியோர்களுடன் இவருக்கும் என்று உம்மை எச்சவும்மை; எண் உம்மையுமாம். |
| வகை:- சூதப்பொழில்.....என்பான் - மாமரங்கள் மிக்க சோலைகள் சூழும் திருவம்பர்ப் பதியில் வாழும் மறையவர், சோமாசி மாறன் என்று சொல்லப் படுபவர்; வேதப்பொருள்.... மொழியான் - அவர் வேதங்களின் உட்பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்தினை இடையறாது சொல்லுவதன்றி வேறு மொழி பயிலாத (நித்த நியமன்); நீதி.......நியமன் - சிவன்பாற் பொருந்திய நியதியில் வரும் நித்த நியமம் பூண்டவர்; பரவையென்னும்....துணையே - பரவையார் என்று சொல்லப்படுகின்ற அம்மையாரின் கணவராகிய வன்றொண்டருக்கு மகிழ்ச்சி பொருந்திய துணைவராவார். |
| சூதப்பொழில் அம்பர் - நகர்வளம்; சூதம் - மா; இந்நாட்டு இப்பக்கம் மாஞ்சோலைகளின் வளங் குறித்தது; இஃது இந்நாளினும் காணத்தக்கது; விரிநூலா சிரியரும் இதனையே எடுத்துப் போற்றியது காண்க (3630); அந்தணன் - குலம் பற்றியது; "மறையாளர் குலம் (3630); என்பான் - எனப்படுவான்; "இல்வாழ்வானென்பான்" (குறள்) என்புழிப்போலக் கொள்க. வேதப்பொருள் அஞ்செழுத்து - வேதங்களின் பொருள் திருவைந்தெழுத்தே என்பது விளம்பி யல்லான் மொழியான் - விளம்புதல் - பலமுறையும் பயின்று கொண்டிருத்தல்; அல்லால் மொழியான் - வேறு சொல்லாதாவர். எதிர்மறை உறுதி குறித்தது; இதனையே ஆசிரியர் முன் "சொல்லார் சீர்ச் சோமாசி மாறர்" (3629) என்று காட்டித் தோற்றுவாய் செய்தருளினர்; பரமன் மன்னும் - பரமன்பாற் பொருந்தும்; மன்னுதல் - பிறழாது நிலை பெறுதல்; ஏழனுருபு தொக்கது; நீதி - நியமன் - என்று கூட்டுக; நீதிப்பரன் என்றே கொண்டுரைத்தலுமாம்; "நீதி பலவுந் தன்னதுரு வாமென மிகுத்ததவ நீதியொடு தானமர்விடம்"(தேவா - வைகா - சாதாரி - 4); பரன் மன்னும் நித்த நியமமாவது சிவாகம விதிப்படி இடையறாத சிவவழிபாடு; "வாழுந் திறமீசர் மலர்க்கழல் வாழ்த்தல் என்பார்" (3631) என்றும், "அஞ்செழுத் தோதும் வாய்மை, நித்தந் நியமம் எனப்போற்றும் நெறியில் நின்றார்" என்றும் (3632) ஆசிரியர் இதனை விரித்தருளினர்; காந்தன் வன்றொன்டன் - காந்தனாகிய வன்றொண்டர்; பண்புத் தொகை; காந்தன் - கணவர்; நாயகர்; மகிழ்துணை - "அன்பால் சாரும் பெருநண்பு சிறப்ப அடைந்து" என்பது விரிநூல் (3633); துணை -துணைவர். |
| ஊரும் பேரும் பண்பும் அடிமைத் திறமும் வகைநூல் வகுத்துக் காட்டிற்று இவை விரிந்தபடி விரிநூலுட் கண்டுகொண்டு கொள்க. |
| (இ-ள்) சூதம்...அம்பரில் - மாமரங்கள் மிக்கு விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவம்பர் நகரின் கண்ணே; தூய வாய்மை....மேலோர் - தூய்மை செய்யும் வாய்மையுடைய வேதங்களைப் பயிலும் மறையவர்களது குலத்தில் மிக மேம்பட்டு விளங்குபவர்; ஏதம்....வந்தால் - உலகுக்குக் கேடுசெய்த மும்மதில்களையும் எரித்த இறைவருக்கு அன்பர்கள் வந்தால்; பாதம்....மிக்கார்-அவர்களது திருவடிகளிற் பணிந்து திரு அமுதூட்டுகின்ற நல்ல பண்பில் மிகுந்தவர்,. |
| (வி-ரை) சூதம் பயிலும் பொழில் - "சூதப்பொழி லம்பரில்" என்ற வகை நூலின் (திருவந்தாதி) சொல்லும் பொருளும் விரித்துப் போற்றப்பட்டது; பயிலுதல் - மிகுதல்; சூதம் - மா. |