|
  |  |  | 
  |  |                       | நீடோடு களியுவகை நிலைமைவரச் செயலறியார் பாடோர்கற் கண்டதனைப் பதைப்போடு மெடுத்தெறிந்தார்.
 |  | 
    |  | 9 | 
    |  | 3641. (இ-ள்) "எந்நிலையில்....பொருள்" என்றே - எந்த நிலைமையில் ஒருவன் நின்றானாயினும்,     என்னை வேடத்தைக் கொண்டானாயினும், நிலைபெற்ற சிறப்பினையுடைய சங்கரனுடைய திருவடியை     மறவாதிருத்தலே உண்மையாகிய உறுதிப் பொருள் என்றே துணிந்து; துன்னிய......துறவாதே - தாம்     மேற்கொண்டு தாங்கிய அந்தச் சாக்கிய வேடத்தினை நீக்காமலே; தூய.....தலைநிற்பார் -     தூய்மை செய்யும் சிவலிங்கக் குறியினை மிக்கஅன்பினாலே மறவாத நிலையினில் சிறந்து     விளங்குவாராய் | 
    |  | 6 | 
    |  | 3642. (இ-ள்) எல்லாம்...அறியாதார் - உலகம் எல்லாம் தமது வடிவமாக உடைய ஈசன் என்ற     பதத்திற்கு வாச்சியமாகிய சிவபெருமானே முழுமுதலாம் தலைவர் என்ற உண்மை யுணர மாட்டாதவர்களே;     பொல்லா.....ஆகுவார் - பொல்லாங்கு துய்க்கும் பொறியிலிகளாய்த் தமது வேடத்தினை அவனில்     வேறு என்று கொண்டடொழியும் சாக்கியர்களாகிப் புன்மையின் நின்றொழுகுவர்; அல்லார்...வல்லார்     - கரிய விடம் பொருந்திய கண்டத்தினையுடைய சிவபெருமானுக்கு இந்த உலகமெல்லாம் ஆளாவதன்றி     மற்றில்லை என்று காணவல்லவராகி; இவர்....நிற்பார் - இந்நாயனார் அந்தச் சாக்கிய     சமயத்தவர் தாங்கும் வேடத்தை மாற்றாமலே சிவன்பா லன்பின்வழியிலே நின்றொழுகுவாராய், | 
    |  | 7 | 
    |  | 3643. (இ-ள்) காணாத....காரணமாய் - கண்ணுக்குப் புலப்படாத அருவத்திருமேனிக்கும், (கட்புலப்படும்)     உருவத் திருமேனிக்கும் மூலமாகிய இருப்பிடமாகி; நீள் நாகம்..சிவலிங்கம் - நீண்ட     பாம்பினை அணிந்த சிவபெருமானை அறிந்து வழிபடுதற்குச் சிறந்த அடையாளமாகிய குறியாக     விளங்கும் சிவலிங்கம்; நாணாது ....தெளிந்தாராய் -நாணமின்றித் தேடிய மாலும் பிரமனும்     காணும்படி அருளாலே அவர்கள் நடுவே விசும்பையும் பாதலத்தையும் அளாவும் அனற்றூனாகித் தோன்றிய     வடிவமேயாம் என்று தெளிந்தவராகி, | 
    |  | 8 | 
    |  | 3644. (இ-ள்) நாடோறும்..நயந்து - நாள்தோறும் சிவலிங்கத்தைக் கண்டு தொழுதபின்பே     உணவு உட்கொள்ளவேண்டும் என்னும் நியமத்தினை மேற்கொள்ள விரும்பி; மாடு ஓர்...நிலைமை     வர - பக்கத்திலே ஒரு வெளியிடத்திலே நிலைபெற்ற சிவலிங்கத்தினைக் கண்டு மனத்தில் நீடு     செல்கின்ற மிக்க மகிழ்ச்சி பொருந்திய நிலைமை கைவரப் பெற்றமையாலே; செயல் அறியார்     - இன்னது செய்வதென் றறியாராகி; பாடு ஓர்......எறிந்தார் - பக்கத்தில் ஒரு கல்லினைக்கண்டு     அதனையே மலராக அன்பினில் விளைந்த பதைப்புடனே எடுத்து அச்சிவலிங்கத்தின் மேல் எறிந்தனர். | 
    |  |  | 
    |  | 9 | 
    |  | இந் நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. | 
    |  | 3642. (வி-ரை) எல்லாம் உடைய - உடைய - வடிவாக உடைய; ஈசன் - ஈசன் என்ற சத்தத்தின்       பொருளாக உள்ளவன் எவனோ அவனே; இறைவன் - முழு முதல்வனாகிய சிவன்; "எவனுக்கு முற்றும்       வடிவங்களாகும்" (காஞ்சிப்புராணம் - அமரேசப்படலம் 15) என்ற கேனோபநிடதப் பொருள்       காண்க. சிவபிரானக்குச், சர்வலோகங்களும் உடைமைப் பொருளாயும், அடிமைப் பொருளாயும்       இருத்தல் பற்றி ‘எல்லாமுடைய ஈசன்’ என்றருளினார் என்ற குறிப்புமாம். "எப்பொருளுமாக்குவான்       ஈசனே யெனுமுணர்வும், அப்பொருள்தான் ஆளுடையார் அடியார்கள் |