570திருத்தொண்டர் புராணம் [வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்]

காணில் - ஆராய்ந்து உண்மை காண்போமானால்.
வில் வேடர்....மேவிற்றால் - இது கண்ணப்ப நாயனார் சரித நிகழ்ச்சியினை உதாரண முகத்தாற் காட்டியவாறு; உபலக்கணத்தால் வாய்நீர் உமிழ்ந்ததுவும், தலைச் செருகிய பள்ளித்தாமம் சூட்டியதுவும், ஊனமுது ஊட்டியதுவும் உடன் கொள்க; செருப்படியும் - செருப்படி முதலாயினவையும் என்க. செருப்படி திரு முடியில் மேவிய செயல் அச்சரிதத்தினுள் காண்க. "முடிமிசை மலரைக் காலில் வளைத்தபொற் செருப்பான் மாற்றி" (772); "திருக்கண்ணி லிடக்கா லூன்றி" (826); மேவிற்று - பொருந்தியது - பொருத்தமென இறைவரால் உவந்து மேற்கொள்ளப் பெற்றது; மேவுதல் அங்கீகரிக்கப் பெறுதல்; திருவாத வூரடிகள் முதலிய பெரியோர்களாலும் போற்றப் படுதலுமாம்.
மற்று நல்லார் அவர் - என்க; மற்று - வேற்று வேடத்தால் - வேறுபட்ட செயலால் நின்ற என்பது குறிப்பு; நல்லார் -நன்மையினை உட்கொண்டவர்.
அன்பாலே நயந்த அச் செய்கையினை என்க - அன்பாலே நயந்தமை முன் (3644--3648) உரைக்கப்பட்டது.
அல்லாதார் - அன்புநெறி வழக்காற்றில் வாராதவர்; புறனுரைப்போர்; மூடர்கள்; கல் - கல்லெறிதல் குறித்தது.
அஃது - அதுவே; தேற்றேகாரம் தொக்கது; அஃது அவர் ஆம் - அதுவே மலராகும் என்றதாம்; "புத்தன் மறவா தோடி யெறிசல்லி புதுமலர்க ளாக்கி னான் காண்" (அரசு.தேவா). ஆம் - ஆக்கச்சொல் விளைவு குறித்தது. அலர் - பழிச்சொல் என்று கொண்டு அஃது - கல் என்று சொல்வது - அரனார்க்குப் பழிச் சொல்லாம் என்று முரைக்கநின்றது; அன்பரைப் பழித்தது அரனைப் பழித்ததேயாம்; அன்பினில் விளையும் ஆரமுதாகிய அரனாரது கருணையினையும் பழித்ததேயாம் என்பனவும் குறிப்பு.
கானில் - என்பதும் பாடம்.

14

3650
ங்கொருநா ளருளாலே யயர்த்துண்ணப் புகுகின்றார்
"எங்கள்பிரான் றனையெறியா தயர்த்தேன்யா" னெனவெழுந்து
பொங்கியதோர் காதலுடன் மிகவிரைந்து புறப்பட்டு
வெங்கரியி னுரிபுனைந்தார் திருமுன்பு மேவினார்.

15

(இ-ள்) அங்கொருநாள்....புகுகின்றார் - அந்நியதி ஒழுக்கத்திலே ஒருநாள் திருவருளினாலே மறந்து உண்ணத் தொடங்குகின்றார்; எங்கள்....எழுந்து - எமது பெருமானைக் கல்லெறிந்து வழிபடாது யான் மறந்தேனே என்று உண்ணாது எழுந்து; பொங்கியதோர்....மேவினார் - மேன்மேலும் பொங்கியதாகிய ஒப்பற்ற பெருவிருப்பத்துடன் மிகவும் விரைந்து புறப்பட்டு வந்து கொடிய யானையின் தோலினை உடுத்த இறைவரது திருமுன்பு சேர்ந்தனர்.
(வி-ரை) அருளாலே அயர்த்து - அயர்த்தல் - மறத்தல்; நியமத்தினை மறந்த மறப்பும் இறைவர் கொடுத்தருளியது; "மறப்பித்துப் பெயர்த்தொன்று நாடுவித்தி" (திருவா); உணவு உண்ணத் தொடங்குகின்றார் அந்நிலையில் நினைந்து என்க. இந்நாயனார் இறைவன்மேற் கொண்ட "அயரா அன்பி"னராதலின் அயர்த்தற்கு ஏதுக் கூறுவராய் அருளால் என்றருளினார். "உண்பதன்முன் மலர் பறித்திட் டுண்ணாராகில்" (அரசு.தேவா) புகுகின்றார் - வினையாலணையும் பெயர்.