| |
| அஃதாவது "உய்வகையாற் பொருள்சிவன் என்று அருளாலே உணர்ந்து அறிந்து" அப்பொருளை அடைய முயலுதல். கூடும் வகை - கைகூடப் பெறும் வகையினாலே. இதுவரை குறித்த உட்கோள் நிறைவேறும் வகை; "கொண்ட குறிப்பினை" (3653) என்பதும் காண்க. குறி - சிவலிங்கம் என்பதுமாம். |
| எறிய அதனை வேட்கையொடும் - கண்டு - என்க. எறித்த செயலினையும், அதனுள் நின்ற வேட்கையினையும் உடன் கண்டு; வேட்கையாவது "பொங்கிய தோர் காதல்" (3650) என முன்கூறப்பட்டது. எறிந்ததனை மட்டும் கண்டு அதனுட்கிடந்து பொங்கிய காதலினைக் காணார் உலகர்; ஆதலின் "அல்லாதார் கல் என்பர்" என்றார்; " உள்ளத்திற் றெளிகின்ற அன்பின் மெய்ம்மை யுருவினையு மவ்வன்பினுள்ளே மன்னும், வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண் விமலரையு முடன்கண்ட" (2921) என்ற நிலை ஈண்டுக் கருதத் தக்கது. |
| கண்டு அருளும் - கண்டமையால் அருளும்; கண்டு - காரணப் பொருளில் வந்தது; கண்ணுதலார் - அருட் கண்ணுடையராதலிற் கண்டு என்ற குறிப்புடன் இங்கு இப்பெயராற் கூறினார். நுதலிற் பொருந்திய கண்ணுடையவர். முன்பின்னாகத் தொக்க ஏழாம் வேற்றுமைத்தொகை. |
| கருணைபொழி திருநோக்கால் - இதுவரையும் இவர் தொழிலினைக் கண்டிருந்த நிலை காலம் பார்த்துக் கொண்டிருந்த நிலை; இப்போது அருள் புரியும் நிலையாதலின் கருணைபொழி திருநோக்கால் கண்டு என்றார். |
| |
| தோன்றுவார் - தோன்றுவாராகி; முற்றெச்சம். தோன்றுவார் வந்த செயல் என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
| உண்டிவினை ஒழித்து - அஞ்சி ஓடிவரும் வேட்கை - இனி இவ்வுலகில் உண்ணுகின்ற - வினை அனுபவிக்கின்ற - நிலையினை ஒழித்து என்றும், பிறவிக்கு அஞ்சி என்றும் குறிப்புப்பட நின்ற அழகு கண்டு களிக்க. ஓடி வருதல் - பாம்பு - புலி முதலிய கொடுவிலங்குகளைக் கண்டு அஞ்சிப் புகலிடம் தேடுவார் போல; "இழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த விப்பிறவிக் கொடுஞ்சூழலி"னின்றும் பிழைக்க இறைவன் றிருவடியாகிய புகலிடம் நோக்கி ஓடிவருதல் பக்குவ முதிர்ச்சியினைக் காட்டும். |
| நெடுவிசும்பில் - நீண்ட ஆகாயம்; பூதாகாயமன்று - ஞானாகாயம் என்பார் நெடுவிசும்பு என்றார். "நீள் விசும்பு" (அரசு - தேவா); "மிக்கசிவ லோகத்திற் பழஅடிமைப் பாங்கருள" வருகின்றாராதலும் குறிப்பு. |
| உண்டிவினை ஒழித்து - "கல்லினா லெறிந்து கஞ்சி தாமுணுஞ் சாக்கியனார், நெல்லினாற் சோறு ணாமை நீள்விசும்பாள வைத்தார்" (அரசு.தேவா - நேரிசை) என்ற திருவாக்கின் விரிவு; சிறந்த சரிதச்சான்றாக இச்சரிதத்தினை இங்கு விளக்குதல் காண்க. இந்நாயனார் காலம் ஆளுடைய அரசுகளுக்கு முற்பட்டது. |
| தோன்றினார் - என்பதும் பாடம். |
| 16 |
| 3652. (வி.ரை) கழல் அடைந்த - முன்கூறியவாறு முன் உண்மைநெறி கண்ட குறிப்பினால் வந்து வழிபட்டுக் கழலிற் புகல் அடைந்த; இப்போது கழல் அடைந்து பணிதல் மேல் இறைஞ்சி விழ என்றதனாற் கூறப்படுதல் காண்க. கழலடைந்த என்பது சாதனமாக என்னும் பொருள்தந்து நின்றது. கழலடைந்த என்பது சாதனமாக என்னும் பொருள் தந்து நின்றது. கழலைடைந்த - திருவடியைத் தியானித்த. "தன்னடைந்தார்க் கின்பங்க டருவானை" (பிள். தேவா; "மாணடி சேர்ந்தார்"; சேர்தல் - இடைவிடாது தியானித்தல் என்பர் பரிமேலழகர்; இறைஞ்சி விழ - கீழே விழுந்து வணங்க. |