6திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

தொன்மை மேவிய தொடர்ச்சியா னிகழ்வது தூய
பொன்னி நாட்டுவே ளாண்மையி லுயர்ந்தபொற் பினதாம்.

5

(இ-ள்.) இன்ன.....குடிதான் - இத்தன்மைத்தாகிய வாழ்வுடைய பதியினிடத்தே ஏயர்கோக்குடியானது; மன்னி...குடியாம் - நிலைபெற்று வழிவழி வளர்ந்து வருகின்ற சோழர்களது சேனாபதிக் குடியாகிய; தொன்மை....நிகழ்வது - பழமை பொருந்திய தொன்று தொட்டு வரும் தொடர்ச்சியினாலேயே பொலிவது; தூய.....பொற்பினது - தூய்மையுடைய காவிரி நாட்டில் வேளாண்மைத் திறத்தால் உயர்ந்த அணிநலம் வாய்ந்தது; (ஆல் - அசை.)

(வி-ரை.) ஏயர்கோக்குடி - குடியாம் : (அது) நிகழ்வது - பொற்பினது என்று கூட்டி முடிக்க.

ஏயர் - ஹே ஹயர்என்பது ஏயர்என மருவியது. இதுவே கேகயர் - என வழங்கலாயிற்றென்பர். ஏயர் - குடிப் பெயர். கோ - தலைமை குறித்தது.
சேனாதிபதிக் குடியாம் - சேனாதிபதியாக வரும் தன்மை ஒரு குடியின் வழிவழி மரபுரிமையாக வந்தது முன்னைநாள் வழக்கு. 881-ல் உரைத்தவை பார்க்க.
ஏயர்கோக் குடி - கோ - தலைமை என்பது முதனூலாகிய "ஏயர்கோன் கலிக்காமன்" என்ற திருத்தொண்டத் தொகையானும், வழிநூலாகிய "ஏயர்சீர்க்குடியே" என்ற திருத்தொண்டர்திருவந்தாதியானு மறிக.
தொன்மை மேவிய தொடர்ச்சி - பழங்கால முதல் இடையறாது தொடர்ந்து வழி வழி வருவது. நிகழ்தல் - விளங்குதல்.
வேளாண்மை - உழவுச் செல்வம்; பொற்பாவது - செழிப்பும் தகுதியும் சிறப்புமாம்: வேளாண்மையில் - வேளாண்மை காரணமாக என்க. நாட்டு - நாட்டின்; நாட்டுக்குச் சிறப்பாயுரிய என்றலுமாம்.
வோளண்மையிற் பொலிவது - இப்புராணமுடைய நாயனார் வேளாளராதற் குறிப்பு. வரும் பாட்டுப் பார்க்க.
நிகழ்ச்சியா னிறைவது - என்பதும் பாடம்.

5

3160
அங்கண் மிக்கவக் குடியினி லவதரித் துள்ளார்
கங்கை வாழ்முடி யார்தொண்டர்கலிக்காம ரென்பார்
தங்க ணயக ரடிபணி வாரடிச் சார்ந்து
பொங்கு காதலி னவர்பணி போற்றுதல் புரிந்தார்.

6

(இ-ள்.) அங்கண்....அவதரித்துள்ளார் - அவ்விடத்துப் பெருமையால் மிகுந்த அந்தக் குடியிலே வந்து அவதரித்துள்ளவர்; கங்கை....என்பார் - கங்கை வாழும் சடைமுடியினை யுடைய சிவபெருமானுடைய திருத்தொண்டராகிய கலிக்காமர் எனப்படுவர்; தங்கள்...புரிந்தார் - தமது பெருமானது திருவடி பணிவார்களது திருவடிகளைச் சார்பாகக் கொண்டு மேன்மேல் வளரும் மிக்க அன்பினாலே அவ்வடியவர்பணியினை விரும்பிச் செய்து வந்தார்,
(வி-ரை.) அங்கண் - அ - முன்கூறிய அந்த ஏயர்கோக்குடி என அகர மிரண்டும் முன்னறி சுட்டு.
கங்கை.....தொண்டர் - சிவனடியார்; என்பார் - எனப்படுவார்.