60திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

றார்;- (4) கேழல் - பன்றி; பொர என்பது எதுகை நோக்கிப் போர என வந்தது; வான்படை - பாசுபதாஸ்திரம். வான் - பெருமை; ஏனை எவற்றாலும் இதனை வெல்லமாட்டாத முதன்மை;- (5) ஒக்க - ஒரே காலத்தில் ஒன்றுபோலவே; முப்புரஞ்செற்று அதில் இருந்த மூவர்களை மட்டும் காத்தருளிய சரிதம். முன்னிய மூவர் - "எண்ணுடை மூவர்" (திருவாசகம் தோணோக்); "மூவெயில் செற்ற ஞான்று" என்ற பதிகத்தில் (திருப்புன்கூர் 8-வது திருப்பாட்டு) இதனை நம்பிகள் மேலும் விரித்தருளுதல் காண்க.
தலவிசேடம் :- திருவாவடுதுறை - III- பக்கம் 297 பார்க்க.
3218
சாத்தி யங்கு வைகுநாட் டயங்கு மன்ப ருடன்கூடப்
பேர்த்து மிறைஞ்சி யருள்பெற்றுப் பெண்ணோர் பாகத் தண்ணலார்
தீர்த்தப் பொன்னித் தென்கரைமேற் றிகழும் பதிகள் பலபணிந்து
மூர்த்தி யார்த மிடைமருதை யடைந்தார்முனைப்பாடித்த தலைவர்.

64

(இ-ள்.) சாத்தி...அருள் பெற்று - முன் கூறிய தமிழ்ச் சொன் மாலையினைச் சாத்தி அங்கு எழுந்தருளியிருக்கும் நாளிலே விளங்கும் அன்பர்களுடனேகூட மீண்டும் வணங்கி அருள்விடை பெற்றுச் சென்று; பெண்ணோர்.....பணிந்து - உமையம்மையாரை ஒரு பாகத்தில் உடைய இறைவரது தீர்த்தமாகிய காவிரியின் தென்கரைமேல் விளங்கும் பதிகள் பலவற்றையும் பணிந்துபோய்; மூர்த்தியார்....தலைவர் - இறைவரது திருவிடை மருதூரிற் சென்று முனைப்பாடி நாட்டுத் தலைவராகிய நம்பிகள் அடைந்தருளினர்.
(வி-ரை.) சாத்தி - "சாத்தினார்" என்று முன் பாட்டிற் கூறி முடித்ததனைத் தொடர்ந்து கூறியது. பேர்த்தும் - மீண்டும் மீண்டும்; பலநாளும்.
தீர்த்தப்பொன்னி தீர்த்தம் - தூய்மை, பரிசுத்தம்; அதனைச் செய்யும் நீருக்கு ஆகிவந்தது; "தீர்த்தன்"என்று இறைவரைக் கூறுவதும் இப்பொருட்டு.
பதிகள் பல - இவை திருவாவடுதுறைக்கும் திருவிடைமருதூருக்கு மிடையில் காவிரித் தென்கரையில் உள்ளவை. இவை திருக்கோழம்பம், திருச்சாத்தனூர், தென்குரங்காடுதுறை முதலியன என்பது கருதப்படும்.
தென்கரைமேல் - இருபதிகளும் உள்ள தென்கரை வழியாகவே நம்பிகள் சென்றருளினர் என்பது. மேல் - என்றதனால் காவிரியின் தென்கரையும் அதன் கிளைகளாய்த் தென்புறமுள்ள கிளை ஆறுகளின் தென்புறமும் கொள்ளப்படும்.
மூர்த்தியார் - பெருந்தலைவர்; "மகாலிங்கம்" என்னும் இடை மருதீசர் தன்மை குறிக்கப்பட்டது. "எந்தை பிரானே" என்ற பதிகக் குறிப்பும் காண்க.
முனைப்பாடி - நம்பிகள் அவதரித்த நாடு; அந்நாட்டரசரால் வளர்க்கப்பட்டனராதலின் இவரும் அந்நாட்டுத் தலைவர் என்பதும் குறிப்பு.

64

3219
ன்னு மருதி னமர்ந்தவரை வணங்கி மதுரச் சொன்மலர்கள்
பன்னிப் புனைந்து பணிந்தேத்திப் பரவிப் போந்து தொண்டருடன்
அந்நற் பதியி லிருந்தகல்வா ரரனார் திருநா கேச்சரத்தை
முன்னிப் புக்கு வலங்கொண்டு முதல்வர் திருத்தாள் வணங்கினார்.

65

(இ-ள்.) வெளிப்படை. நிலைபெற்ற மருதினிடமாக விரும்பி எழுந்தருளியுள்ள இறைவரை வணங்கி இனிய தமிழ்ச் சொல்லாகிய மலர்களை மாலையாகப்