| |
| மறைத்திருவாக்கூர் - இது குடிவளமும் மேன்மையும் பற்றி ஆளுடைய பிள்ளையார் திருவாக்கின் பெருமை கொண்டு நகரச் சிறப்புரைத்ததாம். |
| வாக்கூரவ்வூர் - வாக்கூராகும் - என்பனவும் பாடங்கள் |
| 1 |
3655 | தூமலர்ச் சோலை தோறுஞ் சுடர்நெடு மாடந் தோறும் மாமழை முழுக்கந் தாழ மறையொலி முழக்க மோங்கும் பூமலி மறுகி லிட்ட புகையகிற் றூபந் தாழ ஓமநல் வேள்விச் சாலை ஆகுதித் தூப மோங்கும். | |
| |
| 2 |
| (இ-ள்) தூமலர்....தோறும் - தூய மலர்கள் நிறைந்த சோலைகள் தோறும் ஒளி விளங்கும் நீண்ட மாடங்கள் தோறும்; மாமழை....முழக்கம் ஓங்கும் - பெரிய மேக முழக்கம் கீழ்ப்படும்படி வேத ஒலிகள் கூடிய முழக்கம் மேலோங்கும்; பூமலி....தாழ - அணி பொருந்திய வீதிகளில் இட்ட அகிற்புகைத் தூபமணம் கீழ்ப்படும்படி; ஓமம்....தூபம் ஓங்கும் - ஓமங்கள் செய்யும் வேள்விச் சாலைகளின் ஆகுதிகளின் புகை மேல் ஓங்கும். |
| (வி-ரை) மறை ஒலிமுழக்கம் - ஆகுதித்தூபம் - மறையவர்களின் பதியாதலின் இச்சிறப்புக்களாற் கூறினார். ஆளுடைய பிள்ளையார் புராணம், சண்டேச நாயனார் புராணம் முதலியவை பார்க்க. |
| சோலைதோறும் - மாடம்தோறும் - மறைஒலி முழக்கம் - சோலைகளில் உள்ள மறைமுழக்கம் வேதம் பயிற்றப் பெறும் மறைச் சிறார்களின் கிடைகளினின்றெழும் முழக்கம்; மாடந்தோறும் உள்ள மறைமுழக்கம் மறையவர் மனைகள் தோறும் செய்யும் முத்தீ வேள்விகளில் சொல்லப்படும் வேத மந்திரங்களின் முழக்கம். |
| மழை முழக்கம் - மேக வோசைகள்; வேத மந்திரங்கள் உயர்ந்த நிஷாத சுரத்தில் ஓதப்படும்போது மேக வோசை, யானையின் பிளிறோசை என்ற இவைகளை ஒப்பன என்பதாம். "மேகமுங் களிறு மெங்கும் வேதமுங் கிடையு மெங்கும்" (81) என்பது முதலியவை பார்க்க. ஒலி முழக்கம் - பொருளுள்ள சத்தமே யாயினும் பலர்கூடி உயர்ந்த சுரத்தில் ஒலித்தலால் முழக்க மாயிற்று என்றார். |
| மறுகில் இட்ட அகிற்புகைத் தூபம் - வீதிகளில் நன் மணத்தின் பொருட்டும் மக்களின் உடல் சுகத்தின் பொருட்டும் நறும்புகை இடும் மரபு குறித்தது. |
| ஓம....தூபம் ஓங்கும் - ஓங்குதல் - அளவாலும் பயனாலும் மிகுதல் குறித்தது. நல்வேள்வி - சிவனை முன்னாகச் செய்யும் வேள்வியாதலின் நல் என்றார். |
| மாமழை முழக்கம் - பருவந்தவறாது மாத மூன்று முறையாகப் பெய்யும் மேக ஓசை; இதுவும் அகிற்புகைத் தூபமும் உலகியல் நலங்களின் பெருமை குறித்தன. |
| மறைஒலி- ஆகுதித்தூபம் - இவை வைதிக ஒழுக்கப் பெருமை குறித்தன. இவை ஓங்கும் என்றதனால் இவ்விரண்டனுள் உலக நிலைச் சிறப்பினும் வைதிகச் சிறப்பே மிக்கது என்றதாம். இந்நாயனார் இரண்டானும் சிறந்து விளங்கியமையும், அவற்றுள் சிவநியமத்தினால் வீடுபெற்ற நிலையும் குறிப்பா லுணர்த்தப்பட்ட வாறு கண்டு கொள்க. |
| சுடர் தொடு - என்பதும் பாடம். |
| 2 |
3656 | ஆலைசூழ் பூக வேலி யத்திரு வாக்கூர் தன்னில் ஞாலமார் புகழின் மிக்கார் நான்மறைக் குலத்தி னுள்ளார் | |