|
  |  |  | 
  |  |                       | சிறப்புடைத் திருச்செங் காட்டங் குடியினிற் செம்மை வாய்த்த விறற்சிறுத் தொண்டர் செய்த திருத்தொழில் விளம்ப லுற்றேன்.
 |  | 
    |  | 9 | 
    |  | (இ-ள்) அறத்தினின்....வாழ்த்தி - சிவதருமங்களால் மிகுந்த மேன்மை பெற்ற அந்தணர்கள்     வாழும் திருவாக்கூரில் வந்த வேதியராகிய பெருவள்ளலார் வண்மையுடைய சிறப்புலியாரை வாழ்த்தி;     சிறப்புடை....விளம்பலுற்றேன்- (அத்துணை கொண்டு) சிறப்பினையுடைய திருச்செங்காட்டங்குடியிலே     செம்மைநலம் பொருந்திய விறலினையுடைய சிறுத்தொண்ட நாயனார் செய்த திருத்தொழிலினைச்     சொல்லப் புகுகின்றேன். | 
    |  |  | 
    |  | (வி-ரை) இது கவிக்கூற்று. ஆசிரியர் தம் மரபின்படி, இதுவரை கூறி வந்த சரிதத்தை வடித்தெடுத்து      முடித்துக்காட்டி இனி வரும் சரிதத்துக்குத் தோற்றுவாய் செய்கின்றார். | 
    |  | அறம் - சிவதருமம். வைதிக தருமமுமாம். | 
    |  | மேன்மை அந்தணர் ஆக்கூர் - மேன்மையுடைய அந்தணர்கள் வாழும் திருஆக்கூர். ஆளுடைய      பிள்ளையார் திருவாக்கிற்பட்ட மேன்மை குறித்துத் தொடங்கியவாறே முடித்தபடி; மீண்டும்      குறிப்பிட்டது அச் சிறப்பினை மறவாது உட்கொண்டு நினைவு கூர்தற்பொருட்டு. | 
    |  | வள்ளலார் - தொகைநூற் கருத்தினை வற்புறுத்தி மனங்கொள வைத்தார். | 
    |  | வள்ளலார் வண்சிறப்புலியார் - வள்ளலார் என்றது பண்பினையும், வண்மை என்றது செயலினையும்       குறித்தன; வள்ளற் றஞ்செயல் வாய்ப்ப - என முன்கூறியது காண்க; இஃது இச் சரிதச் சிறப்பாகிய       பகுதி என அறிவித்தவாறு. வள்ளலார் என்றது புகழ்தரும் ஈகைத்திறத்தினையும், வண்மை என்றது       அடியார்களைப் பேணிய நிலையினையுங் குறித்தன என்றலுமாம். | 
    |  | சிறப்புடை - பழஞ் சரிதத் தொடர்பாகிய சிறப்பு. | 
    |  | செம்மை வாய்த்த விறல் - செம்மை - "தெள்ளிவடித் தறிந்தபொருள் சிவன் கழலிற் செறிவென்றே....அன்பு       பள்ளமடை யாயென்றும் பயின்றுவரும் பண்பு" உடைமை (3663); விறல் - அப்பண்பில் ஒழுகும்       ஆற்றல்; செவ்விய நெறியின் படைத் தொழில் விறலுமாம். (3666) | 
    |  | திருத்தொழில் - திரு - இவர் செய்த செயலின் பேரருமைப்பாடு குறித்த அடை மொழி. | 
    |  | 6 | 
    |  | 
 | 
    |  | சரிதச் சுருக்கம்: - காவிரிபாயும் சோழநாட்டிலே சிறந்த பதி திருஆக்கூர் என்பது; அப்பதி,       ஆளுடைய பிள்ளையார் திருவாக்கினால் ஈகைத் திறம் பற்றிப் பாராட்டப் பெற்ற சிறப்புடைய       அந்தணர்கள் வாழும் பெருமையுடையது. அதில் வேதியர்குலத்து வந்தவர் சிறப்புலிநாயனார். | 
    |  | அவர் ஈகையினாற் புகழ்பெற்று விளங்கியதனோடு அடியார்க்களிக்கும் சிவபெருமான் திருத்தொண்டிலும்       சிறந்து விளங்கினார். சிவன் அடியார்களை விதிப்படி வழிபட்டு அமுதூட்டி அவர்கட்கு வேண்டுவன       நல்கி வந்தார்; திருவைந்தெழுத்தினை ஓதி முத்தீ வேட்டனர்; சிவ நல்வேள்விகளைச் செய்தனர்;       உலகில் வள்ளற்றன்மை பொருந்த நிதிமழை மாரிபோல அத்திறத்தினின் மேம்பட்டு நிகழ்ந்தனர்.       இவ்வாறு புகழும் சிறப்பும் பொருந்தப் பணிசெய்து சிவனடி சார்ந்து நிலைபெற்றனர். | 
    |  | 
 |