| |
3672 | நறையிதழித் திருமுடியா ரடியாரை நாடோறும் முறைமையினிற் றிருவமுது முன்னூட்டிப் பின்னுண்ணும் நிறையுடைய பெருவிருப்பா னியதியா கக்கொள்ளுந் துறைவழுவா வகையொழுகுந் தூயதொழிற் றலைநின்றார். | |
| 13 |
| 3670. (இ-ள்) மன்னவனை....அடைந்து - அரசனை விடை கொண்டு தமது பதியின்கண் வந்து சேர்ந்து; பன்னும்....இறைஞ்சி - எடுத்துச் சொல்லப் பெறும் புகழினையுடைய பரஞ்சோதியாரும் குளிர்ச்சியுடைய சந்திரனைச் சூடிய சிரத்தினை உடைய இறைவரைக் கணபதீச் சரத்திலே வணங்கி; திருத்தொண்டு....செய்கின்றார் - திருத்தொண்டினை முன்னை நிலைமையினின்றும் வழுவாமல் முறைப்படி அன்பினாற் செய்கின்றாராய்; |
| 11 |
| 3671. (இ-ள்) வேதகாரணர் அடியார்....செய்வார் - வேதங்களுக்குக் காரணமாகிய சிவபெருமானடியார்களுக்கு வேண்டிய உண்மைப் பணிகளை யெல்லாம் செய்வாராய், தீதில்குடி....நிலை நிற்பார் - குற்றமில்லாத குடியிலே பிறந்த திரு வெண்காட்டு நங்கை என்கின்ற காதலையுடைய மனைக்கிழத்தியாருடனே கூட இருவர் கருத்தும் ஒன்றாகப் பொருந்த வரும் பெருமையுடையதாய் அறநீதியின் வழியே இல்லறம் புரிந்து வாழும் தன்மையினை நிலை நிற்பாராய், |
| 12 |
| 3672. (இ-ள்) நறையிதழி....அடியாரை - தேன்பொருந்திய கொன்றை மாலையைச் சூடிய திருமுடியினையுடைய சிவபெருமானது அடியார்களை; நாடோறும்....துறை - நூல்விதிப்படி நாடோறும் முறைப்படி முன்னே திருவமுதூட்டிப் பின்னே தாம் உண்ணுதலாகிய நிறைவுடைய பெரிய விருப்பத்தினாலே அதனை நியதியாகிய நியமமாகக் கொண்டு ஒழுகும் துறையினில்; வழுவா....தலைநின்றார் - தவறாமல் ஒழுகுவதாகிய தூய்மையுடைய தொழிலிற் சிறந்து விளங்கினார். |
| 13 |
| இம் மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3670. (வி-ரை) தம்பதியில் வந்து அடைந்து - அரசனது நகரத்தினின்றும் தமது பதியாகிய திருச் செங்காட்டங்குடியில் வந்து என்க. அரசன் தலை நகரம் காஞ்சிபுரமென்பது சரித ஆராய்ச்சியாளராற் கருதப்படுகின்றது. |
| பனிமதிவாழ் சென்னியரைக் கணபதீச்சரத் திறைஞ்சி - பனிமதிவாழ் சென்னியர் - சிவபெருமான். அவரைக் கணபதீச்சரத்தில் இறைஞ்சி என்றது அவரை எங்கும் எவ்விடத்தும் எப்பொருளிலும் வணங்கலாம்; "எவனுக்கு முற்றும் வடிவங்களாகும்" (காஞ்சிப்புரா) என்பது கேனோபநிடதம்; இங்கு அவரைக் கணபதீச்சரத் திருக்கோயிலிற் கண்டு வணங்கி; கணபதீச்சரம் என்பது திருச்செங்காட்டங்குடித் திருக்கோயிலின் பெயர். "கன்னவிறோட் சிறுத்தொண்டன் (உடைய) கணபதீச் சரமேய, இன்னமுதன்" (பிள்.தேவா); விநாயக மூர்த்தி கயமுகாசுரனைக் கொன்றபோது இரத்த வெள்ளம் பெருகிய காரணத்தால் திருச்செங்காட்டங்குடி என்ற ஊர்ப்பெயரும், அப்போது கணபதியினாற் சிவலிங்கம் தாபிக்கப்பட்டமையால் கணபதீச்சரம் என்ற கோயிலின் பெயரும் போந்தன. (கந்தபுராணம் - கயமுகனுற்பத்திப் படலம்); ".....இபமுகத் தவுணன் மார்பி, னீடிய குருதிச் செந்நீர் நீத்தமா யொழுகும் வேலைப், பாடுற வருங்கா னொன்றிற் பரத்தலினதுவே செய்ய காடெனப் பெயர்பெற்று" (250); "மீண்டுசெங் காட்டிலோர்சார் மேவிமெய்ஞ் ஞானத் தும்பர், தாண்டவம் புரியுந் தாதை தன்னுருத் தாபித் |