600திருத்தொண்டர் புராணம் [வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்]

3677. (வி-ரை) இந்த இரண்டு பாட்டுக்களாலும் சீராள தேவரது திருஅவதாரத்தில் நிகழ்ந்த மகிழ்ச்சிச் செயல்களும் சடங்குகளும் கூறப்பட்டன.
அலங்கரித்த....கிளைகளிப்ப - மனை அலங்காரங்கள் முதலியவை செய்து மகிழ்ந்தனர் கிளைஞர்கள் என்க.
பெறற்கரிய வளர - தந்தையார் பெறற்கரிய மகனைப் பெற்றதனால் மகிழ்ந்தார் என்க. மணி - மணிபோன்ற மகவு; "இந் நடைமணியைத் தந்தபின்னர்" (திருக்கோவை - 385); பெற்று - பெறுதலால்; பெறற்கரிய - என்றது பிறந்த பொழுதே சோதிடம், உடற்கூற்று இலக்கண நூல் முதலிய அளவைகளால் கண்டு அறிந்தவாறு அம்மகவின் அருமை குறித்தது.
நெய்யாடல் விழா - நன்மகப் பேற்றில் அயலோர் செய்வதொரு மகிழ்ச்சிச் சடங்கு. "மீதணியு நெய்யணி விழாவொடு திளைப்பார்" (1933) என்று ஆளுடைய பிள்ளையார் திருவவதாரத்துக் கூறுதல் காண்க. எண்ணெயாடர் விழா என்பாரு முண்டு.
அலங்கரித்த பெருமை - என்பதற்கு இவ்வாறன்றி, அம்மகப்பேறு அந்த மனைவாழ்க்கையை அணிகலம் போன்று அலங்கரித்த மேன்மையால் என்று உரைத்து, "மற்றத னன்கல நன்மக்கட் பேறு" (குறள்) என் றுதகரிப்பாருமுண்டு.
அலங்கரித்து - மகப்பெற்று - என்பனவும் பாடங்கள்.

18

3678. (வி-ரை) மங்கல....அளப்ப - மங்கல இயங்கள் முழக்குதலும், வேதமந்திரங்களை ஓதி வாழ்த்துதலும் மகப்பேற்றின் மகிழ்ச்சிச் செயல்கள். மறை முழக்கம் - மாமாத்திரர் என்ற இவரது குலம் அந்தணர்க்கும் அரசர்க்கும் இடையில் வைத்து ஒருசார் வேத மந்திரச் சடங்குகளுக்கு உரியாராதல் பெறக் கூறியவாறு. பிறர் உச்சரிக்காமலே தாமாகவே முழங்கிய மறைகளின் முழக்கம் என்றலும் குறிப்பு; இருவகை முழக்கங்களையும் சேர்த்துக் கூறியதனால் இரண்டும் தாமாகவே முழங்கின என்றலுமாம். "எங்கணு மியற்றுபவ ரின்றியு மியம்பு, மங்கல முழக்கொலி மலிந்தமறு கெல்லாம்" (1931); "ஓவா, வேதமொழி யாலொலி விளங்கியெழு மெங்கும்" (1929) என்றவையும், பிறவும் காண்க. வான் அளப்ப - வான் அளவும் ஓங்க; பெருமையினாலும் வானையும் தம்முட்பட மேலோங்கி அளவுபடுத்தி நிற்க.
அங்கணர்தம்....நிதியளித்து - இஃது இச்சடங்கிற் செய்த சிறந்த செயலாம்; நாயனாரது அன்பின் மேன்மை காட்டுவது; சிறந்த பயன் தருவது. இதனை ஏனை உலகவரும் கைக்கொண்டொழுகுதல் பயன்றரும்.
மரபினில் உரிமைச் சடங்கு - தமது குலமரபுக்கு உரிய விதிச் சடங்குகள்; தசதினத்தினிலும் பிறவி, யிறவிகளில் பத்துநாட் சடங்குக்குரிய மரபு என்பது; இவற்றிற் பதினாறுநாட் சடங்குக் குரிய வேறு குலங்களுமுண்மை நூல்களுட் காண்க. "தூயதிரு மாமறை தொடர்ந்தநடை நூலின், மேயவிதி யையிரு தினத்திலும் விளைத்தார்" (1938) என்றது காண்க. இவை "சாதக முறைப்பல சடங்கு" என்ப. ஆளுடைய பிள்ளையார் புராணம் பார்க்க.
காப்பணி - திருநீற்றுக்காப்பு. வேறு உலகர் கொள்ளும் காவல் முறைகளும் உடன் கொள்ளலாம்.

19

3679
ர்வநிறை பெருஞ்சுற்ற மகமலர வளித்தவர்தாம்
பார்பெருகு மகிழ்ச்சியுடன் பருவமுறைப் பாராட்டுச்