[வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்] 36. சிறுத்தொண்ட நாயனார் புராணமும் உரையும்605

3687
ருகுதிரு முடிச்செருகு மந்தியிளம் பிறைதன்னைப்
பெருகுசிறு மதியாக்கிப் பெயர்த்துச்சாத் தியதென்ன
விரிசுடர்ச்செம் பவளவொளி வெயில்விரிக்கும் விளங்குசுடர்த்
திருநுதன்மேற் றிருநீற்றுத் தனிப்பொட்டுத் திகழ்ந்திலங்க,

28

3688
வெவ்வருக்கன் மண்டலமும் விளங்குமதி மண்டலமும்
அவ்வனற்செய் மண்டலமும் முடனணைந்த தெனவழகை
வவ்வுதிருக் காதின்மணிக் குழைச்சங்கு வளைத்ததனுட்
செவ்வரத்த மலர்செறித்த திருத்தோடு புடைசிறக்க,

29

3689
களங்கொள்விட மறைத்தருளக் கடலமுதக் குமிழிநிரைத்
துளங்கொளிவெண் டிரட்கோவைத் தூயவட மணிந்ததென
உளங்கொள்பவர் கரைந்துடலு முயிருமுரு கப்பெருக
விளங்குதிருக் கழும்தினிடை வெண்பளிங்கின் வடந்திகழ,

30

3690
செம்பரிதி கடலளித்த செக்கரொளி யினையந்திப்
பம்புமிருள் செறிபொழுது படர்ந்தணைந்து சூழ்வதெனத்
தம்பழைய கரியுரிவை கொண்டுசமைத் ததுசாத்தும்
அம்பவளத் திருமேனிக் கஞ்சுகத்தி னணிவிளங்க,

31

3691
மிக்கெழுமன் பர்களன்பு திருமேனி விளைந்ததென
அக்குமணி யாற்சன்ன வீரமுமா ரமும்வடமுங்
கைக்கணிகொள் வளைச்சரியு மரைக்கடிசூத் திரச்சரியுந்
தக்கதிருக் காற்சரியுஞ் சாத்தியவொண் சுடர்தயங்க,

32

3692
"பொருவிறிருத் தொண்டர்க்குப் புவிமேல்வந் தருள்புரியும்
பெருகருளின் றிறங்கண்டு பிரானருளே பேணுவீர்!
வருமன்பின் வழிநிற்பீ!" ரெனமறைபூண் டறைவனபோற்
றிருவடிமேற் றிருச்சிலம்பு திசைமுழுதுஞ் செலவொலிப்ப,

33

3693
யன்கபா லந்தரித்த விடத்திருக்கை யாலணைத்த
வணங்கொளிமூ விலைச்சூல மணித்திரூத்தோண் மிசைப்பொலியத்
தயங்குசுடர் வலத்திருக்கைத் தமருகத்தி னொலிதழைப்பப்
பயன்றவத்தாற் பெறும்புவியும் பாததா மரைசூட,

34

3694
ருள்பொழியுந் திருமுகத்தி லணிமுறுவ னிலவெறிப்ப
மருள்பொழிமும் மலஞ்சிதைக்கும் வடிச்சூலம் வெயிலெறிப்ப
பொருள்பொழியும் பெருகன்பு தழைத்தோங்கிப் புவியேத்தத்
தெரூள்பொழிவண் டமிழ்நாட்டுச் செங்காட்டங் குடிசேர்ந்தார்.

35

3684. (இ-ள்) இத்தன்மை....அணைய - இத்தன்மையில் நிகழும் இவரது திருத்தொண்டு பெரிய கயிலை மலையில் எழுந்தருளிய இறைவரது திருவடியிணைகளின் கீழே சென்று அணைய; விடையவர்தாம் - இடபத்தையுடைய அவ்விறைவர் தாமே; அவருடைய....அருளுதற்கு - அவருடைய மெய்யாந்தன்மையினையுடைய அன்பினை நுகர்ந்து அருள் புரிவதன் பொருட்டு; சித்தமகிழ்....அணை