|
  |  |  | 
  |  | 3696. (இ-ள்) வந்தணைந்து.....வணங்கி - வந்து சேர்ந்து கேட்கின்றவர் மாதவராகிய   அடியவரே யாவர் என்று உட்கொண்டு சந்தனத்தாதியார் என்ற அம்மையார் முன்னால் வந்து அரவது திருவடிகளை   வணங்கி; அந்தமில்.... அருளும் என - எல்லையில்லாச் சிறப்பினையுடைய அடியவர்களைத் தேடும்   பொருட்டு அவர் புறத்தே சென்றனர்; எம்மையாளுடைய முதல்வரே? அகத்துள்ளே எழுந்தருளுவீராக என்று   சொல்ல, | 
    |  | 37 | 
  |  | 3697. (இ-ள்) மடவரலை....என்றருள - அவ்வம்மையாரைப் பார்த்துப் "பெண்கள் தாம்   தனியே இருந்த இடத்தில் நாம் தனியே புகுத மாட்டோம்" என்று அருளிச்செய்ய; அது கேட்டு.....எய்தி   - அதனைக்கேட்டு அவர் அவ்விடம் விட்டுச் சென்று விடுவார்போல இருந்தார் என அஞ்சி விரைந்து   மனையின் கடமை முற்றும் உடையவராகிய திருவெண்காட்டு அம்மையார் உள்ளிருந்து மனையின் முன்கடையில்   வந்து, | 
  |  | 38 | 
  |  | 3698. (இ-ள்) அமபலவர் அடியாரை.....போனார் - திருவம்பலமுடைய இறைவரடியார்களைத்   திருவமுது செய்விக்கும் நியமமுடைய அவர், அந்நியம முடித்தற்கு, எமது பெருமானே! இன்று அடியார்   எவரையும் காணாமையால் தேடிச் சென்றார்; வம்பென......மகிழ்வர் - புதிதாக நீர் எழுந்தருளி   வரும் இத்திருவேடத்தினைக் கண்டால் தமது பெரும் பேறென்றே மிகவும் மகிழ்ச்சியடைவர்; இனித்   தாழார் - இனித் தாமதிக்க மாட்டார், | 
  |  | 39 | 
|  | 3699. (இ-ள்) இப்பொழுதே......என்ன - இப்போதே விரைவில் வந்து அணைகுவர்; அவ்வளவும்   தேவரீர் இங்கு எழுந்தருளி யிருக்கவேண்டும் என்று கூற; ஒப்பில் மனை......என்றருளி - ஒப்பற்ற   இல்லறத்தை வழுவாது காத்து நடத்துகின்றவர்களே! வடதேசத்தில் உள்ளோம்; சொல்லுதற்கரிய சிறப்பினையுடைய   சிறுத்தொண்டரைக் காணும்பொருட்டு இங்கு வந்து சேர்ந்தோம் யாம்; எவ்வகையாலும் அவர் இல்லாதபோது   இங்கு இரோம் என்று அருளிச் செய்து, | 
  |  | 40 | 
|  | 3700. (இ-ள்) கண்ணுதலிற் காட்டாதார் - நுதற்கண்ணை மறைத்து வந்த அவர்; கணபதீச்சரத்தின்கண்.....என்றருளி   - கணபதீச்சரத்திலே அழகிய மலர்களை உடைய திருவாத்தியின் கீழே சென்று அமர்கின்றோம்;   அவர் வந்தால் நாம் அங்கிருக்கும் தன்மையினைச் சொல்வீராக என்றருளிச் செய்து; அண்ணலார்.....இருந்தார்   - இறைவனார் திருவாத்தி மரத்தினடியிற் சேர்ந்தருளி விரும்பி எழுந்தருளியிருந்தனர். | 
  |  | 41 | 
|  | இந்த ஆறுபாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. | 
  |  | 3695. (வி-ரை) தண்டாதது ஒரு வேட்கை - பெரும்பசி; தண்டாத - தணியாத;   ஒரு - ஒப்பற்ற; அளவற்ற. | 
  |  | போல - பசியில்லாராயினும் பசியுடையார் போல நடித்தனர் என்க. சோறிடுவர் மனை   வினவும் தொழில் பற்றி வந்த உவமம். | 
  |  | கண்டாரை - தம்மாற் காணப்பட்டார்களை; தம்மைக் கண்டுவினவும் பேறு பெற்றாரை என்றலுமாம். |