[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்67

(வி-ரை.) திருக்குடமுக்கு - திருவலஞ்சுழி - திருநல்லூர் - நம்பிகள் யாத்திரையாகச் சென்றருளிய வழி குறிக்கப்பட்டது.
தங்குகாதல் - நிலைபெற்று மாறாத பெரு விருப்பம்; தங்கு - அப்பதியிற்றங்கும் என்றலுமாம்.
தமிழ் - தேவாரத் திருப்பதிகம்; தமிழாற் பரவி - நம்பிகள் வேதாகமங்களாலும் பரவிப் போற்றலாமாதலின் அதனிற் பிரித்துணரத் தமிழால் என்றார். இயல்பு குறித்த தென்றலும்.
அரசு - திருநாவுக்கரசர்; அரசினுக்கு...அடியளித்த - வரலாறு அவர் தம்புராணம் (1459 -1461) பார்க்க.
திங்கள் முடியார் - வேண்டுவார் வேண்டிய ஈயும் திருவருளுடைமை குறிப்பு.
திருக்குடமுக்கு திருவலஞ்சுழி திருநல்லூர் - இம்மூன்று பதிகளுக்கும் நம்பிகளது பதிகங்கள் கிடைத்தில.

69

3223
ல்லூ ரிறைவர் கழல்போற்றி நவின்று நடுவு நம்பர்பதி
எல்லா மிறைஞ்சி யேத்திப்போந் திசையாற் பரவுந் தம்முடைய
சொல்லூ தியமா வணிந்தவர்தஞ் சோற்றுத் துறையின் மருங்கெய்தி
அல்லூர் கண்டர்கோயிலினுள்ளடைந்துவலங்கொண்டடிபணிவார்.

70

3224
"அழனீ ரொழுகி யனைய"வெனு மஞ்சொற் பதிக மெடுத்தருளிக்
கழனீ டியவன் பினிற்போற்றுங் காதல் கூரப் பரவியபின்
கெழுநீர் மையினி லருள்பெற்றுப் போந்து பரவை யார்கேள்வர்
முழுநீ றணிவா ரமர்ந்தபதி பலவும் பணிந்து முன்னுவார்,

71

3225
தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திருவை யாறதனை
மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதந் தொழுதிறைஞ்சிச்
சேவில் வருவார் திருவாலம் பொழிலிற் சேர்ந்து தாழ்ந்திரவு
பாவு சயனத் தமர்ந்தருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண்,

72

3226
"மழபா டியினில் வருவதற்கு நினைக்க மறந்தா யோ"வென்று
குழகா கியதங் கோலமெதிர் காட்டி யருளக் குறித்துணர்ந்து
நிழலார் சோலைக் கரைப்பொன்னி வடபா லேறி நெடுமாடம்
அழகார் வீதி மழபாடி யணைந்தார் நம்பி யாரூரர்.

73

3223. (இ-ள்.) நல்லூர்...நவின்று - திருநல்லூர்ப் பெருமானது திருவடிகளைத் துதித்துப் பாடி; நடுவு...போந்து - இடையிலே உள்ள இறைவர் பதிகள் எல்லாவற்றையும் வணங்கித் துதித்துச் சென்று; இசையால்....எய்தி - தமிழிசையினாலே துதிக்கின்ற தமது பதிகங்களைப் பயனாக விரும்பி ஏற்று அணிந்துகொண்டருளிய இறைவரது திருச்சோற்றுச் துறையின் பக்கத்திற் சேர்ந்து; அல்லூர்...பணிவார் - விடந்தங்கிய கண்டராகிய சிவபெருமானது திருக்கோயிலினுள்ளே அடைந்து வலமாகச் சூழ்ந்து வந்து திருவடிகளிற் பணிவாராகி.

69

3224. (இ-ள்.) அழனீர்...எடுத்தருளி - "அழனீர் ஒழுகியனைய" என்று அழகிய சொற்களாலாகிய திருப்பதிகத்தினைத் தொடங்கியருளி; கழல்...பரவிய பின் - திருவடிகளைப் பெருகிய அன்பினாலே துதிக்கின்ற பெருவிருப்பம் மேலும் மிகும்படி போற்றியபின்; கெழு...போந்து - உரிமையாகிய தன்மையில் இறை