[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்71

ஐயர் கமலச் சேவடிக்கீ ழார்வம் பெருக விழுந்தெழுந்து
மெய்யு முகிழ்ப்பக் கண்பொழிநீர் வெள்ளம் பரப்ப விம்முவார்.

75

3230
"மறைக ளாய நான்கு"மென மலர்ந்த செஞ்சொற் றமிழ்ப்பதிகம்
நிறையுங் காத லுடனெடுத்து நிலவு மன்பர் தமைநோக்கி
"இறையும்பணிவா ரெம்மையுமா ளுடையா"ரென்றென் ரேத்துவார்
உறையூர்ச் சோழன் மணியாரஞ் சாத்துந் திறத்தை யுணர்ந்தருளி,

76

3231
ளவர் பெருமான் மணியாரஞ் சாத்திக் கொண்டுவரும்பொன்னிக்
கிளருந் திரைநீர் மூழ்குதலும் வழுவிப் போகக் கேதமுற
அளவி றிருமஞ் சனக்குடத்து ளதுபுக் காட்ட வணிந்தருளித்
தளரு மவனுக் கருள்புரிந்த தன்மை சிறக்கச் சாற்றினார்

77

3227. (இ-ள்.) அணைந்து....புகுந்து - சேர்ந்து திருக்கோபுரத்தை வணங்கி அன்பர்கள் உடன் சூழ்ந்துவரத் திருக்கோயிலின் உள்ளே புகுந்து; பணங்கொள்...வீழ்ந்து - படத்தினையுடைய பாம்பினை அணிந்த இறைவரது திருமுன்புபணிந்து நிலமுற வீழ்ந்து எழுந்து; பரங்கருணை....எடுத்து - அளக்கலாகாத கருணைத் தன்மையினை உட்கொண்ட பேரருளின் திறத்தினைத் துதித்துத் திருமேனி முழுதும் மயிர்க்கூச்செறிய உள்ளமுருகி இசையுடன் கூடிய திருப்பதிகத்தினைப் "பொன்னார், மேனி" என்று தொடங்கி,

73

3228. (இ-ள்.) அன்னே...புறம்பணைந்து - "அன்னே! உன்னையல்லாலினி யாரை நினைக்கேன்" என்று துதித்து ஒப்பற்ற பெருமையினையுடைய பதிகமாலையினைச் சாத்தி வணங்கிப் புறத்தே அணைந்து; மன்னும்...மகிழ்ந்து - நிலைபெற்ற அத்திருப்பதியில் சிலநாள்கள் எழுந்தருளித் திருத் தொண்டர்களுடன் கூடி மகிழ்ந்தருளி; பொன்னிக் கரையின்....போதுவார் - காவிரியின் கரையில் இரண்டு பக்கமும் உள்ள பதிகளைப் பணிந்து மேற்குத் திசை நோக்கிச் செல்வாராகி;

74

3229. (இ-ள்.) வெளிப்படை. சிவந்த சடையினை யுடைய இறைவரது திருவானைக்காவில் அணைந்து திருத்தொண்டர்கள் சேர முன்னே வந்து எதிர்கொள்ள வணங்கித் திருக்கோயிலினுள்ளே புகுந்து இறைவரது தாமரைபோன்ற திருவடிகளின் கீழே ஆசைபெருக விழுந்து எழுந்து திருமேனி முழுதும் உரோமபுளகம் போர்ப்பக் கண்களினின்றும் ஆனந்த வெள்ளம் பாயத் திளைப்பாராகி,

75

3230. (இ-ள்.) மறைகளாய...எடுத்து - "மறைகளாயின நான்கும்" என்று தொடங்கி விரிந்த செஞ்சொற்களாலாகிய தமிழ்ப் பதிகத்தினை நிறையும் பெருவிருப்பத்துடன் தொடங்கி; நிலவும்...ஏத்துவார் - நிலைபெறும் அன்பர்களைப் பார்த்து "இறையும் பணிவார் எம்மையு மாளுடையாரே" என்றென்றேத்துவார்; உறையூர்..உணர்ந்தருளி - உறையூர்ச் சோழரது மணியாரத்தை இறைவர் அணிந்து ஏற்றுக்கொண்டருளிய திருவருட்டிறத்தினை உணர்ந்தருளி,

76

3231. (இ-ள்.) வளவர் பெருமான்...கேதமுற - சோழ அரசர் மணியாரம் அணிந்து கொண்டபடியே காவிரியின் கொழிக்கும் அலைகளையுடைய நீரிலே மூழ்குதலும் அது நீரினுள் தவறி வீழ்ந்து போக அதனால் அரசன் வருத்தமுற; அளவில்...அணிந்தருளி - அளவில்லாத திருமஞ்சனக் குடத்தினுள் அது புகுதமஞ்சனம் ஆட்டியபோது அதனை இறைவர் அணிந்தருளி; தளரும்...சாற்றினார் - மனந்தளர்ந்திருந்த அவ்வரசனுக்குக் கருள்புரிந்த தன்மையினைச் சிறப்பித்து ஏத்தியருளினார்.

77

இவ்வைந்து பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.