74திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

போது நீரினுடனே அதனைத் தமது திருமேனியில் அணிந்தருளினார் என்பது "நின்மல! கொள்ளென வாங்கே, ஆரங்கொண்ட" என்ற பதிகத்தாற் பெறப்படும்.
சிறக்க - யாவரும் சிறப்பா யறியும்படி; சாற்றினார் - எடுத்துப் போற்றினார். தலவரலாறாதலின் இறைவரது அருளின் பெருமை குறிக்க அதனைச் சிறக்கச் சாற்றினார் என்பது.
திருவாரம் - என்பதும் பாடம்.

77

திருவானைக்கா
திருச்சிற்றம்பலம்

பண் - காந்தாரம்

மறைக ளாயின நான்கும் மற்றுள பொருள்களு மெல்லாந்
துறையுந் தோத்திரத் திறையுந் தொன்மையு நன்மையு மாய
அறையும் பூம்புன லானைக் காவுடை யாதியை நாளும்
இறைவ னென்றடி சேர்வா ரெம்மையு மாளுடை யாரே.

(1)

தார மாகிய பொன்னித் தண்டுறை யாடி விழுத்தும்
நீரி னின்றடி போற்றி நின்மல கொள்ளென வாங்கே
ஆரங் கொண்டவெம் மானைக் காவுடை யாதியை நாளும்
ஈர முள்ளவர் நாளு மெம்மையு மாளுடை யாரே.

(7)

ஆழி யாற்கரு ளானைக் காவுடை யாதிபொன் னடியின்
நீழ லேசர ணாக நின்றருள் கூர நினைந்து
வாழ வல்லவன் றொண்டன் வண்டமிழ் மாலைவல் லார்போய்
ஏழு மாபிறப் பற்று வெம்மையு மாளுடை யாரே.

(10)

திருச்சிற்றம்பலம்.

பதிகக் குறிப்பு :- ஆசிரியர் முன் (3230) காட்டியருளியவாறு கண்டு கொள்க.
பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) துறையும் தோத்திரம் - துறைகளிலுமாகிய தோத்திரம்; தோத்திரத்து இறை - தோத்திரங்களுக் கெல்லாம் நுதலிய பொருளாகிய முதல்வன்; வேதங்களும் எவ்வகைக் கீதங்களும் எப்பொருளையேனும் எத்தெய்வத்தையேனும் சொல்லினும் அவற்றிற்கெல்லாம் பொருளாகும் முழு முதல்வன்; இறையும், தொன்மையும், நன்மையும் ஆகிய ஆதி - என்று கூட்டுக; நாளும் சேர்வார் என்க. இறைவன் என்று - இவரே முழுமுதல்வன் என்றுட் கொண்டு; சேர்வார் - சேரும்அடியவர்கள்; "எதிர்கொள்ள வந்து நிலவும்அன்பர்" (3230); எம்மையும் - உம்மை ஆட்கொள்ளத் தகுதிபெறாத எம்மையும் என்று இழிவு சிறப்பும்மை;-(2) வங்கம் - கப்பல்; வங்கமேவிய என்றது வேலைகளின் பொதுவியல்பு; வஞ்சகர்கள் - தேவர்கள், முதல்வனாதலின் முதலில் வந்தவிடத்தினை நீ உண்டபின் நாங்கள் பின்னர் எழுந்த அமுதினைப் பின் உண்போம் என்று வேண்டிய நயப்பாடு வஞ்சம் எனப்பட்டது; அடராமை - வருந்தாதபடி;-(3) நேரிழை - கங்கை; கொன்றை...அரவங்கள் - உம்மைத் தொகை; ஏலுமாறு - பொருந்திய வகையால்;-(4) பந்தம் - தன்னின் நீங்காது பிணிப்பவன்;-(5) தீ கணையாக அரவம் நாணாகக், கல் சிலையாகக் கொண்டு என்க; கல் - மேருமலை; வளையும் சிலை - வளையும் வில்; இதனால் வளையாத கல்லினை என்பது கொள்ளக் கிடக்கும் நயம் காண்க;-(6) விலையிலி - விலை அளவு