[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்81

3237
ப்பதி நீங்கி யருளினாற் போகி
   யாவினஞ் சாடுவார் நீடும்
எப்பெயர்ப் பதியு மிருமருங் கிறைஞ்சி
   யிறைவர்பைஞ் ஞீலியை யெய்திப்
பைப்பணி யணிவார் கோபுர மிறைஞ்சிப்
   பாங்கமர் புடைவலங் கொண்டு
துப்புறழ் வேணி யார்கழ றொழுவார்
   தோன்றுகங் காளரைக் கண்டார்.

83

(இ-ள்.) அப்பதி...போகி - அந்தப் பதியினை நீங்கி அருள்விடை நீங்கி பெற்றுச் சென்று; ஆவினஞ்சு....இறைஞ்சி - ஆனைந்து என்னும் பஞ்சகவ்வியத் திருமஞ்சன மாடியருளும் இறைவர் நீடியுள்ள எல்லாப் பதிகளையும் காவிரியின் இரண்டு கரைப் பக்கங்களிலும் சென்று வணங்கி; இறைவர்...எய்தி - இறைவரது திருப்பைஞ்ஞீலியினைச் சென்று சேர்ந்து; பைப்பணி....தொழுவார் - நச்சுப்பையினையுடைய பாம்பினை அணிந்த சிவபெருமானது கோயிற் றிருக்கோபுரத்தினை வணங்கிப் பக்கத்துச் சுற்றி வலங்கொண்டு வந்து பவளம் போன்ற சடையினையுடைய இறைவரது திருவடிகளைத் தொழுவார்; தோன்று....கண்டார் - முன்னே காட்சிப்பட நின்ற கங்காள வேடங்கொண்ட இறைவரைக் கண்டார்.
(வி-ரை.) அருளினால் - அருள்விடை பெற்று.
எப்பெயர்ப் பதியும் இருமருங்கு - இவை, திருச்செந்துறை, திருவாலந்துறை, திருத்துடையூர், திருப்பராய்த்துறை முதலாயின என்பது கருதப்படும். நம்பிகளது பதிகங்கள் கிடைத்தில! எப்பெயர்ப்பதியும் எல்லாப் பதிகளிலும்.
பைப்பணி - பை - நச்சுப் பை; பணி - பாம்பு. துப்பு - பவளம்.
தொழுவார்...கண்டார் - தொழுவாராகிய நம்பிகள், தம் முன்பு இறைவரைக்கங்காள வேடமுடையவராகக் கண்டனர். கங்காள வேடத்தாராக இவருக்கு இறைவர் எதிர் காட்சியளித்தனர். "ஆரணீய விடங்கரே" என்ற பதிகமும், அதன் கருத்தினை ஆசிரியர் மேற்பாட்டில் விரிப்பதுவும் காண்க.
இத் திருவேடங் கண்ட காரணமே பதிகம் அவ்வா றருளப்பட்டதென்பது.

83

3238
ண்டவர் கண்கள் காதனீர் வெள்ளம்
   பொழிதரக் கைகுவித் திறைஞ்சி
வண்டமர் குழலார் மனங்கவர் பலிக்கு
   வருந்திரு வடிவுகண் டவர்கள்
கொண்டதோர் மயலால் வினவுகூற் றாகக்
   குலவுசொற் "காருலா விய"வென்
றண்டர்நா யகரைப் பரவி"யா ரணிய
   விடங்கரா" மருந்தமிழ் புனைந்தார்.

84

(இ-ள்.) கண்டவர்....இறைஞ்சி - முன் கூறியவாறு கங்காள வேடராக இறைவரைக் கண்ட நம்பிகள் காதலினாலே தமது திருக்கண்களினின்றும் ஆனந்தக் கண்ணீர்வெள்ளம் பொழியக் கைகள் கூப்பி வணங்கி; வண்டமர்....கூற்றாக - வண்டுகள் விரும்பி வாழும் கூந்தலையுடைய பெண்களது உள்ளத்தைக் கவர்கின்றபடி பலிக்கு வரும் இறைவரது திருவடிவினைக் கண்டு அவர்கள் கொண்ட மயலி