| |
| னாலே வினாவுகின்ற பொருளுடைய சொற்களாக வைத்து; குலவு....புனைந்தார் - விளங்கும் சொல் "காருலாவிய" என்று தொடங்கித் தேவதேவரைத் துதித்து "ஆரணீய விடங்கரே" என்ற மகுடங் கொண்ட அருந் தமிழ்மாலை புனைந்தருளினர். |
| (வி-ரை.) காதல் நீர் கண்கள் பொழிதர - என்க; காதல் நீர் - ஆனந்தக் கண்ணீர். |
| வண்டமர்...வடிவு - பிட்சாடணத் திருவுருவம்; தாருகாவனத்து இருடியரது மனைவிமார்களிடம் இத் திருவுருவுடன் இறைவர் சென்று அவர்களை மயங்கச் செய்து அவர்களது மனங்களைக் கவர்ந்த வரலாறு கந்தபுராணத்துட் காண்க. |
| மயலால் அவர்கள் வினவு கூற்றாக - அத் திருவடிவத்தினைக் கண்டு அதில் ஈடுபட்டு மயங்கி அவர்கள் அவரை விளித்துப் பேசும் காதற் சொற்களாகிய பொருள் கொண்டு. |
| இது பதிகக் கருத்தும் குறிப்புமாக ஆசிரியர் காட்டியவாறு; "மங்கை மார்பலர் வேண்டிக் காதல் மொழிந்த சொல்" (11) என்ற பதிகத்தினை ஆசிரியர் பொருள் விரித்தவாறு. |
| "காருலாவிய" என்று - இது பதிகத் தொடக்கமாகிய முதற் குறிப்பு. |
| "ஆரணீய விடங்க"ராம் அருந்தமிழ் - ஆரணீய விடங்கரே என்று பாட்டுத்தோறும் முடிபுகொண்டு இறைவரை விளித்து வினவிய தமிழ்ப் பதிகம்; ஆம் - முடிபுகொண்ட; ஆரணீயம் - வனத்தின் வரும்; வனத்தைப் பற்றிய; ஆரண்யம் - காடு; விடங்கர் - உளி படாத திருமேனியுடையவர்; ஒருவரால் ஆக்கப்படாது தாமாகச் சமைந்த இயற்கைத் திருவடிவம்; மேலே வேறு அணிந்து மறைக்கப்படாத நக்க வடிவம் என்பதும் குறிப்பு. |
| வண்டறை - என்பதும் பாடம். |
| திருப்பைஞ்ஞீலி |
| திருச்சிற்றம்பலம் | பண் - கொல்லி |
| 84 |
| காரு லாவிய நஞ்சை யுண்டிருள் கண்ட வெண்டலை யோடுகொண் டூரெலாந்திரிந் தென்செய் வீர்பலி யோரி டத்திலே கொள்ளுநீர் பாரெ லாம்பணிந் தும்மை யேபர விப்ப ணியும்பைஞ் ஞீலியீர் ஆர மாவது நாக மோசொலு மார ணீய விடங்கரே. | |
| (1) |
| அன்னஞ் சேர்வயல் சூழ்பைஞ் ஞீலியி லார ணீய விடங்கரை மின்னு நுண்ணிடை மங்கை மார்பலர் வேண்டிக் காதன் மொழிந்தசொன் மன்னு தொல்புகழ் நாவ லூரன்வன் றொண்டன் வாய்மொழி பாடல்பத் துன்னி யின்னிசை பாடு வாருமை கேள்வன் சேவடி சேர்வரே. | |
| (11) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு: - முன் ஆசிரியர் (3237 - 3238) எடுத்துக் காட்டியவாறு கண்டுகொள்க. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு: - (1) கார் - கருமை நிறம்; மேகம் என்றுகொண்டு மேகத்தின் தன்மை - கைம்மாறு கருதாத உதவி - கொண்ட என்றதும் குறிப்பு; உலாவுதல் - பெறுதல்; நீர் ஓரிடத்திலே பலிகொள்ளும் - என்க; ஊர் எல்லாம் திரியாது எம் ஒருவரிடத்திலே தங்கும் என்ற காதற் குறிப்புடைய சொல்; பாரெலாம்....பணியும் - உலகமெல்லாம் வந்து இங்கு உம்மை வணங்கும்; நீர் வேறெங்கும் போதல் வேண்டா என்பது; ஆரமாவது நாகமோ சொலும் - ஆரம் பாம்பானால் அணுக வந்து பலி எப்படி இடுவர்? என்பது குறிப்பு. "நீயுலக |