| |
| குராமலர்கள் அரும்புதற் கிடமாகிய சோலைகள் அணி செய்யும் திருப்பாண்டிக் கொடுமுடியினை அணைந்தருளினர். |
| (வி-ரை.) திருக்கடைக்காப்புச் சாத்தி - பதிகக் கருத்தை விளக்குதலால் திருக்கடைக்காப்பினை விதந்தெடுத் தோதினார். |
| கரவில் அன்பர் - நெஞ்சிற் கள்ளங் கபடு இல்லாத அன்பர்கள்; "கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால், விரவாடும் பெருமானை" (தேவா); கரவு - மனத்திற் கொள்ளும் கபடம்; கள்ளம். இவ்வன்பர்கள் திருப்பாச்சிலாச்சிராமத்தில் நம்பிகளால் முகநோக்கிப் பாடப்பெற்றாராய் உடன் வந்தவர்கள் போலும். |
| அன்பர்தங் கூட்டமும் தொழுது கலந் தினிதிருந்து - அன்பர்களைத் தொழுதலும் அவருடனிருத்தலும் சீவன்முத்தராகிய அணைந்தோர் தன்மையதாம். |
| விரவிய - இடையிற் பொருந்திய; கொங்கிற் புகுமுன் வழியிடை விரவிய. |
| குரவலர் சோலை அணி...கொடுமுடி - குரவு - "குராமலர்" (தேவா); "குறியதன் கீழாக் குறுகலும் அதனோ, டுகர மேற்றலும்" என்பதிலக்கணம். குரா என்றது குரவு என நின்றது. |
| ஈங்கோய்மலை - நம்பிகள் பதிகம் கிடைத்திலது! |
| விமலர்தம் பதிபல - இவை காவிரிக் கரையில் திருப்பைஞ்ஞீலியினை அடுத்துக் கரை அளவில் உள்ளவை. இவ்வாறுள்ள பழைய கோயில்கள் பல இன்றும் காவிரிக்கரையில் காணப்படுவன. |
| 85 |
3240 | கொங்கினிற் பொன்னித் தென்கரை கறையூர்க் கொடுமுடிக் கோயின்முன் குறுகிச் சங்கவெண் குழைய ருழைவலஞ் செய்து சாரந்தடி யன்பினிற் றாழ்ந்து பொங்கிய வேட்கை பெருகிடத் தொழுது, புனிதர்பொன் மேனியை நோக்கி "இங்கிவர் தம்மை மறக்கவொண் ணா"தென் றெழுந்தமெய்க் குறிப்பினி லெடுப்ப, | |
| 86 |
3241 | "அண்ணலா ரடிகண் மறக்கினு நாம வஞ்செழுத் தறியவெப் பொழுதும் எண்ணிய நாவே யின்சுவை பெருக விடையறா தியம்பு"மென் றிதனைத் திண்ணிய வுணர்விற் கொள்பவர் "மற்றுப் பற்றிலே" னெனச்செழுந் தமிழால் நண்ணிய வன்பிற் பிணிப்புற நவின்றார் நமச்சிவா யத்திருப் பதிகம். | |
| 87 |
| 3240. (இ-ள்.) கொங்கினில்....குறுகி - கொங்குநாட்டிலே காவிரியின் தென்கரையில் உள்ள கறையூர்ப் பாண்டிக்கொடுமுடித் திருக்கோயிலின் முன்னே சேர்ந்து; சங்கவெண்...தொழுது - சங்கினா லியன்ற குழையினை அணிந்த இறைவரைத் திருக்கோயிலினைச் சூழ்ந்து வலஞ்செய்து சார்ந்து திருவடிகளில் அன்பினாலே வணங்கி மேன்மேலும் பொங்கிய ஆசை மேலும் பெருகத் தொழுது; புனிதர் பொன்மேனியை நோக்கி - இறைவரது பொன்னார்ந்த திருமேனியை நோக்கி; இங் |