[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்85

கிவர்....எடுப்ப - "இங்குள்ள இவரை மறக்கவொண்ணாது" என்று திருவுள்ளத்தில் எழுந்த மெய்க் குறிப்பினாலே தொடங்க,

86

3241. (இ-ள்.) அண்ணலார்...கொள்பவர் - "அண்ணலாரது திருவடிகளை நான் மறப்பினும் அவரது திருநாமமாகிய திருவைந்தெழுத்தினை எண்ணிய நாவே இனிய சுவை பெருக இடையறாமற் சொல்லும்" என்ற இக்குறிப்பினைத் தமது உறைப்புடைய உணர்வினாலே கொள்பவராகி; மற்றுப் பற்றிலேன்....நமச்சிவாயத் திருப்பதிகம் - "மற்றுப் பற்றெனக் கின்றி" என்று தொடங்கிச் செழுமையாகிய தமிழினாலே பொருந்திய அன்பினாலே கட்டுப்பாடு பெறும்படி நமச்சிவாயத் திருப்பதிகத்தினைச் சொல்லியருளினர்.

87

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
3240. (வி-ரை.) கொங்கு - கொங்கு நாடு. முன் பாட்டினும் "கொங்கில்" (3239) என்றார்; இதுவரை காவிரி வடகரையிலும் இரு கரைகளிலுமாகச் சோழநாட்டில் யாத்திரை செய்தருளிய நம்பிகள், இங்குக் காவிரி - வடகரை தாண்டி வடகரைப் பதிகளில் (63-வதாக) இறுதிக்கண்ணின்ற திருவீங்கோய் மலையினை வணங்கிச் சோணாடு நீங்கிக் கொங்கு நாடாகிய வேற்று நாட்டுக்குள் யாத்திரை சென்றருளும் நிலை குறித்தற்கு.
கறையூர்க் கொடுமுடிக் கோயில் - "கறையூரிற் பாண்டிக் கொடுமுடி" என்பது பதிகம். ஒரு பாண்டியனது கறைநோய் தீர்த்த காரணத்தால் இப்பெயர் பெற்றதென்பது தலவரலாறுகளுள் ஒன்று. கொடுமுடி - இறைவர் பெயர். மேருவின் பெருஞ் சிகரங்களுள் ஒன்றென்பது வரலாறு; அதனை இடமாகக் கொண்டு இறைவர் விளங்க வீற்றிருத்தலின் கொடுமுடிநாதர் என்றே பெயர் வழங்குவர். கொடுமுடியின் கோயில் என்க. (2236 பார்க்க.)
குழையர் உழை - குழையாருடைய கோயிலின் பக்கத்துச் சுற்றி வலமாக.
பொங்கிய வேட்கை பெருகிட - முன்னமே உள்ளடங்காமல் மேலெழுந்து பொங்கிய பெருவிருப்பம் மேலும் பெருக.
பொன்மேனி - பொன்னார்ந்த அழகுடைய திருமேனி. "பொன்னார் மேனியனே" (தேவா). அடியிணையினில் - என்பதும் பாடம்.
இங்கிவர்....எடுப்ப - இங்கு இறைவரது திருமேனிப் பொலிவினில் ஈடுண்டு உள்ளூர அழுந்திவிட்டமையால் இனி இவரை எப்போதும் மறக்கவொண்ணாது என்று திருவுளத்தில் மெய்க்குறிப்பு நிகழ, அதனாலே அக்கருத்துத் தோன்ற; மெய்க்குறிப்பு - உண்மை; சத்தாகிய குறிப்பு. மெய் - திருமேனி என்றலுமாம்.

86

3241. (வி-ரை.) அண்ணலார்...இயம்பும் என்று - இது பதிகக் குறிப்பு; "நற்றவாவுனை நான்மறக்கினுஞ் சொல்லும் நா நமச்சி வாயவே" என்ற தேவாரத்தின் பொருள் விரித்தவாறு.
நாம அஞ்செழுத்து - இறைவரது திருநாமமாகிய திருவைந்தெழுத்து; "ஐந்தெழுத்தின் நாமத்தான்காண்" (தேவா).
"அறிய எப்பொழுதும் எண்ணிய நாவே - இயம்பும்" - அறிய - மனம் அறிந்துகொள்வதனால்.
எப்பொழுதும் எண்ணிய நா - இடைவிடாது நாவானது திருவைந்தெழுத்தைத் தழும்பேறச் சொல்லிக்கொண்டிருக்கும்; ஈண்டு எண்ணுதல் என்ற மனத்தின் செய்கை அதனால் இடைவிடாது தூண்டப்பட்டுத் தானே சொல்லிப் பழகுதல் என்ற பொருளில் வந்தது; உட்கரணமாகிய மனமும் அதனாற் றூண்டப்பட்ட
புறக்கருவி