| |
| 3162. (வி-ரை.) இப்பாட்டினால் நாயனாரது சரித வரலாற்றின் சுருக்கமும் அமைப்பும் கூறப்பட்டன. சரிதம் பின்னர் (புரா. 383=3537 முதல் புரா. 408 = 3562 வரை) உள்ள பாட்டுக்களிற் கூறப்படுதல் காண்க. |
| இப்பாட்டினால் சரிதத்துக்குப் பதிகம் போலச் சுருக்கம் கூறித்தோற்றுவாய் செய்துகொண்டு, நம்பியாரூரர்வரலாறு பற்றி இச்சரிதம் நிகழ்தலால், அவர் திருத்தொண்டத்தொகை யருளியது முதல் பரவையா ரூடலினைத் திருவாரூர்ப் பெருமான் றூது சென்று தீர்த்த துணையாலே இனிதமர்ந்தருளியது வரை, அவரது வரலாற்றினை முறையே கூறி, அவ்வாறு நம்பிகள் பெருமானைத் தூதுவிட்ட செய்தி கேட்டுக் கலிக்காமனார் வெம்பி நம்பிகள்பால் செற்றங்கொண்டார் என்று இச்சரிதத்தினைத் தொடங்கி விரித்து முடித்தனர் ஆசிரியர். இதனால் நம்பிகளது சரிதமும், முன், தடுத்தாட்கொண்ட புராணத்திறுதியில் விடுத்த இடத்தினின்று இச்சரித நிகழ்ச்சிவரை உடனே கூறிச் செல்லும் கவிநயமுங் கண்டுகொள்க. |
| நாவலூர் மன்னர் - திருநாவலூரில் அவதரித்த நம்பியாரூரர். மன்னர் - தலைவர்; மன்னராகிய நரசிங்கமுனையர்பால் வளர்ந்த காரணக் குறிப்பும்பட நின்றது. |
| நாதனைத் தூது விட்டதனுக்கு - நாதன் - தமது இறைவராகிய திருவாரூர்ப் பெருமான். தூதுவிட்ட செய்தி பின் 3477 (புரா. 323) முதல் 3528 (374) வரை வரும் பாட்டுக்களாற் கூறப்படும். விட்டதனுக்கு - விட்டமைபற்றி. |
| "யாவர்- புரிந்தனர்!" என்று இழிப்ப - யாவர் புரிந்தனர் - செற்றங்கொண்ட அவலக் குறிப்புப் பற்றிய வினா. வேறு ஒருவருமிலர் என்பது. இழித்தல் - குறைவுபடக் கூறுதல். |
| திருத்திய - திருத்துதற்கு - திருத்தும் பொருட்டு. |
| திருத்திய - மேவ வந்த - செயல் என்க. செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். |
| வந்தவச் செயல் - இறைவர் இவ்விருவருக்குமிடையாடிச் செய்த செயலும், கலிக்காமனாரது செயலும், நம்பிகளது செயலும் கூடிய தொகுதி. செயல் - பால் பகா அஃறிணை. |
| 8 |
| வேறு |
3163 | திருத்தொண்டத் தொகையருளித் திருநாவ லூராளி கருத்தொன்று காதலினாற் கனகமதிற் றிருவாரூர் ஒருத்தர்கழன் முப்பொழுது முருகியவன் பொடுபணிந்து பெருந்தெழுமெய் யன்பினாற் பிரியாதங் குறையுநாள், | |
| 9 |
3164 | தாளாண்மை யுழவுதொழிற் றன்மைவளந் தலைசிறந்த வேளாளர்குண்டையூர்கிழவரெனு மேதக்கோர் வாளார்வெண் மதியணிந்தார்மறையவராய் வழக்கினில்வென் றாளாகக் கொண்டவர்தா ளடைந்தன்பா லொழுகுவார், | |
| 10 |
3165 | செந்நெல்லும் பொன்னன்ன செழும்பருப்புந் தீங்கரும்பின் இன்னல்ல வமுதுமுத லெண்ணில்பெரும் பலவளங்கள் மன்னியசீர்வன்றொண்டர்க் கமுதாக வழுவாமற் பன்னெடுநாட் பரவையார்மாளிகைக்குப் படிசமைத்தார். | |
| 11 |