92திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

புணர்ந்து மெய்யுணர்வினிற் பொங்க - புலனின்பம் புணரு முணர்வு வேறு; இங்கு அவற்றாற் புலப்படா இன்பம் புணர்வுறும் மெய்யுணர்வு - சிவானந்த போக பூமி - வேறு; இது சிவஞானஅருட்புவனமாகிய அருளுணர்விற் பொங்கிற்று என்பது.
தாண்டவம்...கிடைத்தபின் - அருட் கூத்து ஆடும் தமது பெருமானை வெளிப்படக் கை வரும்படி நேர் பெற்றபின்; தலைப்படுதல் - கிட்டுதல்; கிடைக்கப் பெறுதல்.
சைவ ஆண்டகையார்....நம்பிகள்; ஆண்டகைமை - அன்பின் உறைப்பாகிய வீரம்.
அடுத்த அந்நிலைமை விளைவு - பெற்ற சிவானந்தத்தின் விளைவாகிய போகம்.
யார் - உரைப்பார் - யார் என்ற வினா ஒருவருமிலர் என்று எதிர்மறை குறித்து நின்றது; ஆதலின் எம்மாற் சொல்லலாகாதது என்பது குறிப்பெச்சம்.
குறிப்பு: - இப்பாட்டினையும் "ஐந்து பேரறிவும்" என்ற திருப்பாட்டினையும் ஒப்பிட்டுக் காண்க.

90

3245
ந்நிலை நிகழ்ந்த வாரருள் பெற்ற
   வன்பனா ரின்ப வெள்ளத்து
மன்னிய பாடன் மகிழ்ந்துடன் பரவி
   வளம்பதி யதனிடை மருவிப்
"பொன்மணி மன்று ளெடுத்தசே வடியார்
   புரிநடங் கும்பிடப் பெற்றால்
என்னினிப் புறம்போ யெய்துவ"தென்று
   மீண்டெழுந் தருளுதற் கெழுவார்,

91

3246
ஆயிடை நீங்கி யருளினாற் போவா
   ரருவரைச் சுரங்களும் பிறவும்
பாயுநீர் நதியும் பலபல கடந்து
   பரமர்தம் பதிபல பணிந்து
மேயவண் டமிழால் விருப்பொடும் பரவி
   வெஞ்சமாக் கூடலும் பணிந்து
சேயிடை கழியப் போந்துவந் தடைந்தார்
   தென்றிசைக் கற்குடி மலையில்.

92

3245. (இ-ள்.) அந்நிலை....அன்பனார் - அத்தன்மை நிகழப் பெற்ற நிறைந்த அருளினைப் பெற்ற அன்பனாராகிய நம்பிகள்; இன்பவெள்ளத்து...பரவி - இன்பப் பெருக்கிலே நிலைத்த திருப் பாட்டினை மகிழ்ச்சியோடும் பாடித் துதித்து; வளம்பதி...மருவி - வளம் பொருந்திய அப்பதியினிடைத் தங்கியிருந்தருளி; பொன்மணி...என்று - அழகிய பொன்னம்பலத்தினில் எடுத்த சேவடியினையுடைய கூத்தப்பெருமானார் புரிநடனத்தினைக் கும்பிடும் பேறு பெற்றால் இனிப் புறமே சென்று கிடைக்கப்பெறும் பொருள் வேறென்ன உள்ளது? (ஒன்றுமில்லை) என்ற கருத்துடனே; மீண்டு - அங்கு நின்றும் புறப்பட்டு; எழுந்தருளுதற் கெழுவார் - செல்வதற்குத் துணிந்தெழுவாராகி;

91