[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்93

3246. (இ-ள்.) ஆயிடை....போல்வார் - அவ்விடத்தினின்றும் நீங்கி அருள் விடைபெற்றுச் செல்லும் நம்பிகள்; அருவரை....பரவி - கடத்தற்கு அரிய மலைக் கானங்களும் மற்றும் நிலங்களும் பெருகிப் பாய்கின்ற நதிகளுமாகிய பலவற்றையும் கடந்து சென்று இறைவரது பதிகள் பலவற்றையும் வணங்கிப் பொருந்திய வளப்பமுடைய தமிழ்த் திருப்பதிகங்களாலே துதித்து; வெஞ்சமாக் கூடலும் பணிந்து - திருவெஞ்சமாக் கூடலினையும் தொழுது; சேயிடை....மலையில் - நெடுந்தூரம் கடந்து சென்று தென்றிசையில் உள்ள திருக்கற்குடி மலையில் வந்து அடைந்தருளினர்.

92

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
3245. (வி-ரை.) அந்நிலை நிகழ்ந்த - "அடுத்த அந்நிலைமை" (3244) என்று முன்பாட்டிற் கூறி முடித்த அந்த என அகரம் முன்னறி சுட்டு; நிலையாவது முன்கூறிய சிவானந்த அனுபவநிலை. நிகழ்ந்த - நிகழப்பெற்ற.
மன்னிய பாடல் - இப்பதிகம் கிடைத்திலது!
மருவி - சிலகாலம் தங்கியிருந்து.
"பொன்மணி....எய்வது" என்று - இக்கருத்துடன் கூடிய பதிகம்பாடி அருள் விடை பெற்று என்பது. நடம் கும்பிடப் பெறுதலே எல்லாவற்றிலும் சிறந்த பேறு; வீடுதரும் தன்மையுடையது; ஆதலின் இதனை விட்டுப் புறம்போய்ப் பெறுவது தான் யாது? ஒன்றுமில்லை என்பதாம்; "கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதா மின்பமாம்" என்ற கருத்து; என்று - என்ற பொருள் கொண்ட பதிகம் பாடியருளி; இப்பதிகமும் கிடைத்திலது!
மீண்டு - முன் 3244-ல் உரைத்தபடி இறைவர் வயமேயாகித் தன்னை மறந்த அழுந்திய நிலையினின்றும் வெளிப்பட்ட நிலையின் மீண்டு என்க.
எழுந்தருளுதற்கெழுவார் - அங்கு நின்றும் புறப்பட்டுச் செல்வதற்கு எழுவாராகி; எழுவார் - நீங்கி - என மேல்வரும் பாட்டுடன் முடிக்க. இவ்வாறன்றி, உலகியல் வழக்கில் போகின்றேன் என்னாது, வருகின்றேன் - போய்வருகின்றேன் என்று விடைபெறும் மரபுக்கு ஏற்ப இங்கு உரைத்துக்கொள்வதுமாம்.

91

3246. (வி-ரை.) ஆயிடை நீங்கி - ஆயிடை - அவ்விடத்தினின்றும்; இடை - இடம்; இடையினின்றும். நீக்கப் பொருளில் வரும் ஐந்தனுருபு தொக்கது.
அருளினால் - அருள்விடை பெற்று.
அருவரை....கடந்து - கற்சுரங்களுங் கட்டாறுகளுமாயுள்ளன மேல் கொங்கு நாட்டின் நிலையும் அதனை ஒட்டிய கீழ் கொங்கின் நிலையுமாம். "கானகமுந், துன்று மணிநீர்க் கான்யாறுந் துறுகற் சுரமுங் கடந்தருளி" (வெள்-சருக்-15), "கற்சுரமு நீரூருங் கான்யாறு நெடுங்கானும் பலகழிய" (கழறிற். புரா. 164) முதலியவை பார்க்க.
பதிபல - இவை மூலனூர், தென்னிலை, கருவூர் முதலாயின என்பதும்,
நதிகள் - அமராவதி - நன்காஞ்சி - சிற்றாறு - குழகனாறு முதலியன என்பதும் கருதப்படும்.
வெஞ்சமாக் கூடல் - கொங்கு நாட்டுப் பாடல் பெற்ற பதிகளுள் ஒன்று. தலவிசேடம் பார்க்க.
சேயிடை கழிய - இடையிலே பட்ட நெடுந்தூரம் நாடு கடந்து.
கென்றிசை - கொங்கு நாட்டின் தெற்குத் திசையில் உள்ள.

92