என்று மற்றுளோ ரியம்பவு மேறுசீர்த் தொண்டர் “பொன்றி ரட்சுடர் நவமணி பொலிந்தமீ னுறுப்பால் ஒன்று மற்றிது வென்னையா ளுடையவர்க் காகும்; சென்று பொற்கழல் சேர்Óகெனத் திரையொடுந் திரித்தார். | 17 | (இ-ள்) என்று...தொண்டர் - முன் கூறியவாறு மற்றுள்ளோர் சொல்லவும் அதுகேட்ட ஏறுகின்ற சிறப்புடைய தொண்டராகிய அதிபத்தர்; பொன்.....ஆகும் - பொன்னும் தொகுதியாகிய சுடரினையுடைய நவமணிகளும் விளங்கும் மீன் உறுப்புக்களாற் பொருந்துகின்ற வேறாகியஇது என்னை ஆளுடைய இறைவருக்கே ஆகும். அவரது பொன்னார்ந்த திருவடிகளிற் சேர்க என்று அலையில் சுழல விடுத்தனர். (வி-ரை) என்று....இயம்பவும் - என்று - “மீனொன்று படுத்தனம்Ó என்று; மற்றுளோர் - பரிசனங்களாகிய பரதவர். ஏறுசீர் - மிகுகின்ற சிறப்பு; ஏறும் - சிவனடியில் எறப்பெறும் என்றதும் குறிப்பு. தொண்டர் - அதிபத்தர். ஒன்றும் மற்று இது - ஒன்றுதல் - பொருந்துதல்; மற்று - ஏனைய மீன்களின் வேறாகிய என்பது. சென்று பொற்கழல் சேர்க - மீனினை விடும்போது அதனை நோக்கி அதிபத்தர் சொல்லியது. நிவேதிக்கும் வகை. (4002 - 4004). திரையொடும் திரித்தார் - ஒடு - உருபு திரையின் கண் என வேற்றுமை மயக்கம்; திரித்தல் - சுழலவீசுதல், கரையின்றும் கடலில் வீசுகின்றாராதலின் அலையினடுவுட் சேரும்படி சுழற்றி வீசினார் என்க. இது என்னை ஆளுடையவர்க்கு ஆகும் - உயர்ந்த பொருளாதலின் இறைவருக்கே உரியது என்றபடி. “விரும்பின கொடுக்கை பரம்பரற் கென்றுÓ (பட்டினத்தார் - திருவிடைமருதூர் மும்மணிக்கோவை - 28); உடையவர்க்கே என்ற பிரிநிலை ஏகாரம் தொக்கது. |
|
|