வளமுடையார் பாலெண்ணெய் கொடுபோய்மா றிக்கூலி் கொள முயலுஞ் செய்கையுமற் றவர்கொடா மையின்மாறத் தளருமன முடையவர்தாஞ் சக்கரவெந் திரம்புரியுங் களனில்வரும் பணிசெய்து பெறுங்கூலி காதலித்தார், | 10 | (இ-ள்) வளமுடையார்.....மாற - செல்வ வளமுடையவர்களிடம் எண்ணெய் கொண்டுபோய் விற்றுக்கொடுத்து அதனாற் பெறும்கூலியினைக் கொள்ள முயலுகின்றஅச்செய்கையும் மற்று அவர்கள் எண்ணெய் கொடாமையில் இல்லையாக; தளரும்.....காதலித்தார் - (திருப்பணி முட்டவருதலால்) தளரும் மனமுடைய அந்நாயனார் தாம் செக்கு ஆடும் இடத்தில் வரும் பணிசெய்து அதனாற் பெறும் கூலியினைப் பெற விரும்பியவராய், (வி-ரை) வளமுடையார் - “உள்ளோர்Ó என்ற முன்கூறிய கருத்து. கூலிகொள முயலும் செய்கை - கூலிகொண்டு பணிசெய்ய முயலும் செய்கை. மற்று அவர் - வளமுடையார்; கூலிக்கு மாறவும் கொடாமையின் அவர்கள் அருளுக்கு வேறானவர் என்பது குறிப்பு. இவ்வாறு உபகரிக்கவும் மறுக்கும் செல்வர் சிலருடைய வண்கண்மை கூறியவாறு. தளரு மனம் - திருப்பணிக்கு முட்டுப்பாடு நேர்ந்த நிலையினைப் பற்றி மனந்தளர்ந்தனர். சக்கர எந்திரம் புரியும் - களன் - செக்கு ஆடும் இடம். பணி - அங்கு அதற்கு உரிய அவ்வேலைகள். காதலித்தார் - காதலித்தாராகி; முற்றெச்சம். |
|
|