அகமலர்ந்த வர்ச்சனையி லண்ணலார் தமைநாளு நிகழவரு மன்பினா னிறைவழிபா டொழியாமே திகழநெடு நாள்செய்து சிவபெருமா னடிநிழற்கீழ்ப் புகலமைத்துத் தொழுதிருந்தார் புண்ணியமெய்த் தொண்டனார். | 9 | (இ-ள்) அகமலர்ந்த அர்ச்சனையில் - அகத்துள் விளங்கிய பூசையில்; அண்ணலார்தமை...நெடுநாள் செய்து - சிவபெருமானை நாடோறும் நிகழ வருகின்ற அன்பினாலே நிறையும் வழிபாட்டினை இடையறாது விளங்கும்படி நெடுநாட்கள் செய்து; சிவபெருமான். மெய்த்தொண்டனார் - சிவபெருமானது திருவடியின் கீழே புகலாக அடைந்து புண்ணிய மெய்த் தொண்டனாராகிய வாயிலார் நாயனார் தொழுது அமர்ந்திருந்தனர். (வி-ரை) அகமலர்ந்த அர்ச்சனையில் - வழிபாடு - அகப்பூசை; நிகழவரும் - விளங்க வருகின்ற; ஒழியாமே - நீங்காமல்; எப்போதும். புகல் - புகுமிடமாக; தஞ்சமாக; நிலைபெற்ற இருப்பிடமாக. புகலமைத்து - புகுதலைப் பொருந்தி; அடிநிழற்கீழ்த் தொழுதிருந்தார் - திருவடியில் சேர்ந்திருந்தார்; திருவடிமறவாது இடையறாத சிவபோகத்தில் தொழுதிருத்தலே வீடுபேறாம். |
|
|