பாடல் எண் :4144

அந்நிலையே சிவபெருமா னன்பரெதிர் வெளியேநின்
“றுன்னுடைய கைவாளா லுறுபாச மறுத்தகிளை
பொன்னுலகின் மேலுகம் புக்கணையப் புகழோய்நீ
இந்நிலைநம் முடனணைÓ கென் றேவியெழுந் தருளினார்.
11
(இ-ள்) அந்நிலையே.......நின்று - அந்நிலையிலே அப்போதே சிவபெருமான் அன்பரெதிரில் வெளிப்பட்டு எழுந்தருளி நின்று; உன்னுடைய...என்று ஏவி - உன்னுடைய கையில் ஏந்தியவாளினால் துண்டமாக்கித் தண்டிக்கப்பட்டதனாலே இங்குத் தம்மைப்பற்றிய பாசத்தை அறுத்துப் புனிதராகிய உன் சுற்றத்தார்கள் தேவருலகத்தினும் மேலாகிய உலகங்களிலும் புகுந்து பின் வந்து முறையில் நமது உலகத்தினிற் சார, நீ இந்நிலையில் இப்போதே நம்முடனே அணைவாயாக என்று கட்டளையிட்டு; எழுந்தருளினார் - அன்பரை உடன் கொண்டெழுந்தருளினர்.
(வி-ரை) அந்நிலையே - உயிர்ச்சார்புகளாகிய அனைத்தையும் அறுத்தெறிந்த அந்நிலையில் அப்போதே.
வெளியே - வெளிப்பட்டு; முன்னரும் அந்நிகழ்ச்சிகளின் உடனாய் மறைந்து தாமிருந்தனர். இப்போது வெளிப்பட்டனர் என்க.
உன்னுடைய....அணைய - பொன்னுலகு - தேவருலகு; மேலுலகம் - போக பூமிகள்; பொன்னுலகினும் மேல் உலகங்களிலும் என்க; புக்கு - அணைய - புகுந்து பின்னர் வந்து சார; இவ்வாறு புகுதல் முன் கன்மங்க ளறும் பொருட்டென்க. நாயனாரது வாளால் வெட்டப்பட்டுத் தீர்ந்தது சிவனாரை மறுத்ததும் சிவன்பொருள் நுகர்ந்ததுமாகிய சிவாபராதங்களேயாம். அதற்குமுன் உள்ள பிற கன்மங்களும் தீர்ந்த பின்னரே, சிவனுலகம் புகலாமாதலின் அவை தீரும் பொருட்டு விண் முதலிய உலகங்களிற் சேறல் வேண்டப்பட்டதென்க.
உறுபாசம் உன்னுடைய கைவாளால் அறுத்த - கிளை - அணைய என்க. அறுத்த - அறுக்கப்பட்ட; செயப்பாட்டுவினைப் பொருளில் வந்தது; உறுபாசம் - ஆனை மறுத்ததனால் உற்ற பாவம்; அறுத்த கிளை - அறுத்ததனால் புனிதராகியமையின் எனக் காரணக் குறிப்புப்பட உடம்பொடு புணர்த்தி ஞதினார்; இக்கிளைஞர், உயிர் நீத்து இறந்துபடாமைக் காக்க நேரும்போது செய்யத்தகுவன என்ற உலகியல அறம்பற்றிச் செயல் செய்தனராதலானும், “குற்றமறப் பின் கொடுப்போம்Ó (4138) என்றதனால் சிவதிரவியங் கவரும் கருத்திலர் ஆதலானும், ஆணைமறுத்து உண்டதற்கு உரியதண்டம் செய்யப்பட்டா ராதலானும் இவர்களும் முறையிற் கன்மானுவம் தீர்ந்த பின் முத்தி பெற்றனர். புக்குப் - பின் அணைய என்க; “கலந்தணைவாய்Ó (37) என்புழிப்போல; இங்கு, இவ்வாறன்றிப், பொன்னுலகின் மேலுலகம் என்றதற்கு தேவருலகத்தின் மிக்கதாகிய சிவனுலகம் என்றும், கிளைஞர் பெற்றது உடலை விட்டுச் சென்று சிவனுலகு புகும் விதேகமுத்தி என்றும், அவ்வாறன்றி நாயனார் பெற்றது சதேக (உடலுடன் கூடிய) முத்தி என்றும் உரைப்பாருமுண்டு. சதேகமுத்தியாவது - நம்பிகள், சேரமானார், கண்ணப்பர், ஆனாயர் முதலியோர் பெற்றது போல வருவது; கிளை - கிளைஞர் - மரத்தின் கிளை போல்வார்; உவம வாகுபெயர்; அணைக என்று - என்றது அணை கென்று என வந்தது தொகுத்தல் விகாரம். இவர்களைச் சிவன் அடியாருடன் பகையாய் முத்திபெற்றவர்களுள் வைத்து வகுத்தனர் திருத்தொண்டர் புராண வரலாறுடையார்; இயற்பகை நாயனாரது கிளைஞர்போல. நாயனாரது சொல்லையும் திருவாணையையும் மறுத்துச் செயல் செய்து தம் உயிர் காத்துக் கொண்ட செயலையே பகைத்து என்று கொண்டனர்.
இந்நிலை - இந்நின்ற நிலையே; தமது வளமெல்லாஞ் சிவன் திருவமுது பெருக்குதற்காக்கியமையாற் பொருட் சார்பு நீங்கிய நிலையும், கிளைமுழுதுமற வெறிந்தமையாலுடற்சார்பு உயிர்ச்சார்புக ணீங்கியமையும் பெறப்பட்டன; இவ்வாறு சார்புகெட ஒழுகினமையால் மேல்வரும் வினைகணீங்கச் சாருநிலை பெற்றனரதலின் இந்நிலையே நம்பால் அணைக - என்றருளினர்; இனி இவர் இவ்வுலகிற் றங்குதற்குக் காரணமில்லை என்பதாம்.
ஆர் உயிர் ஆய் - சித்துப் பொருள்களாகிய உயிர்கள் தோறும் நிறைந்தவனாகியும்; ஆர்தல் - நிறைதல்; கிளைமுதல் தடிந்த உம் வேற்றுமைத் தொகை; முதல் - வினைமுதல், வேர்; தடிந்த - வெட்டி வீழ்த்திய; குறிப்புப் பொருள்; “மாமுதல்தடிந்தÓ (முருகு); தொனி என்பர்; தாள் அடைந்து - தியானித்து; அடைந்ததனால்; ஞானமூட்டிச் செந்நெறி நிற்பித்தலின் அத்தனாய் என்றும், ஊட்டி வளர்த்தலின் அன்னையாய் என்றும், உயிர்க்குயிராதலின் ஆருயிராய் என்றும் அழியாத மீளா நிலை தருதலின் அமிர்தாகி என்றும் கூறினார் என்பர்.