தென்றமிழும் வடகலையுந் தேசிகமும் பேசுவன மன்றினிடை நடம்புரியும் வள்ளலையே பொருளாக ஒன்றியமெய் யுணர்வோடுமுள்ளுருகிப் பாடுவார் பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார். | 2 | (இ-ள்) தென்றமிழும்.....தேசிகமும் - தென்றமிழும் வட மொழியும் பிறதேச மொழிகளும் யாதொன்று அடுத்ததாகக் கைவரினும்; பேசுவன...பொருளாக - திருவம்பலத்தில் நடம் புரியும் வள்ளலாகிய ஸ்ரீ நடேசப் பெருமானையே அவற்றுள் பேசப்படும் உயர்ந்த குறிக்கோளாக, உட்கொண்டு; ஒன்றிய......பாடுவார் - ஒன்றாகப் பொருந்திய மெய்யுணர்வினோடும் மனமுருகிப் பாடுபவர்களே; பன்றியுடன்...பாடுவார் - பன்றியாகிய விட்டுணுமூர்த்தி யுடனே அன்னப்பறவையாகிய பிரமதேவனும் அறியமுடியாத பரமனையே பாடுவார் எனப்படுவார்கள். (வி-ரை) பொருளாக....உள்ளுருகிப் பாடுவார் - பரமனையே பாடுவாராவர் - என்று முடிக்க; ஆவார் என ஆக்கச்சொல் வருவிக்க. பின்னுள்ள பாடுவார் என்ற பெயர்ப்பயனிலைகொண்டு முடிந்த தென்றலுமாம். தென்றமிழும் வடமொழியும் தேசிகமும் - ஆகிய இவற்றுளொன்று கிட்டுவது எதுவாயினும் அது என்க. வடமொழி - ஆரியம்; “ஆரி யத்தொடு செந்தமிழ்ப்பயன்Ó, “தமிழ்ச்சொலும் வடசொலுந் தாணிழற் சேரÓ (தேவா), “ஆரிய முந்தமி ழும்முட னேசொலிÓ (திருமந்), “வடமொழியுந் தென்றமிழு மறைகணான்கு, மானவன்காண்Ó (தேவா). சிறப்புப்பற்றித் தமிழை முன்வைத்து, வடகலையை அதன்பின் சார்த்தி ஓதினார். தேசிகம் - பிற தேசமொழிகள்; திசைச் சொல்; பேசுவன - பேசப்படுவன; பேசுவன - பொருளாக - என்க; தென்றமிழ் - முதலியன சொல்லும், வள்ளல் - சொல்லாற் குறிக்கப்படும் பொருளுமாக; “உரையின் வரையும் பொருளி னளவு, மிருவகைப் பட்ட வெல்லைÓ (11. திருமுறை - கோயினான்). ஒன்றிய...உருகி - இவை மனநிலை; முன்கூறிய சொல்லும் பொருளும் - பாட்டு; இங்குக் கூறியவை பாடுங்கால் உள்ள மனநிலை; இம்மனநிலைகள்கூடாது பாடுமவர்களது பாட்டினாற் பயனில்லை என்பதாம்; கூலிக்குப் பாடுவார்களது பாட்டில் மயங்கிப் பொறியிழந்து வீழும் உலகமாக்கள் இவ்வுண்மையினை உணர்ந்துய்வார்களாக. உள்உருகி - மனமுருகி. ஒன்றுதல் - சிவபரம் பொருளோடு வேறின்றி மனமொழிகள் ஒற்றித்தல்; வள்ளலையே பொருளாக - பாடுவார் - சிவனையே பொருளாகக்கொண்ட பாட்டுக்களே பாடத்தக்கன. ஏனையோர்களைப் பொருள்களாகக் கொண்டவை பாடத்தக்கன வல்லவென்பது; திருக்கோவையார் - ஞானஉலா - முதலியவற்றின் பொருள் காண்க; வள்ளல் - என்றதனால் இடைவிடாமை பற்றிச் சிவனடியாரையும் உள்ளிட்டுக் கொள்க. ஏகாரங்கள் பிரிநிலை. |
|
|