பாடல் எண் :4181

தொண்டரை விளக்கத் தூயோ னருள்செயத் துயிலை நீங்கித்
திண்டிறன் மன்ன “னந்தத் திருப்பணி செய்தார் தம்மைக்
கண்டுநான் வணங்க வேண்டுÓ மென்றெழுங் காத லோடுந்
தண்டலைச் சூழல் சூழ்ந்த நின்றவூர் வந்து சார்ந்தான்.
11
(இ-ள்) தொண்டரை.....அருள்செய - தொண்டராகிய பூசலாரை உலகத்தார் அறியச் செய்யும் பொருட்டுத் தூயசிவபெருமான் இவ்வாறு அருளிச் செய்தாராக; துயிலை நீங்கி - துயிலுதலை விட்டு; திண்திறல்......காதலோடும் - திண்ணிய திறலினையுடைய அவ்வரசன் அந்தத் திருப்பணி செய்தவரைக் கண்டு நான் வணங்கிட வேண்டும் என்று மேனமேல் எழுகின்ற பெருவிருப்பினோடும்; தண்டலை...சார்ந்தான் - சோலைகளின் கூட்டம் சூழ்ந்த திருநின்றவூரில் வந்து சார்ந்தனன்.
(வி-ரை) தொண்டரை விளக்க - இறைவர் அரசரது கனாவில் முன்கூறியபடி உரைத்தருளியதற்குக் காரணம் கூறியவாறு; “வாலிதா நிலைமை காட்டÓ (378), “தம் தொண்டர் மறாத வண்ணமுங் காட்டுவான்Ó (407), “அல்ல னல்குர வான் போதிலும் வல்ல ரென்றறி விக்கவேÓ (445), “ஞாலத்தார் விரும்பி யுய்யும் அந்நெறி காட்டு மாற்றால்Ó (திருநீல - புரா - 10), “தொண்டரை விளக்கங்காணÓ என்பன முதலியவை காண்க. அருள் செய -அருளிச் செய்து மறைந்தருள.
கண்டு நான் வணங்க வேண்டும் - அவரை விசாரித்துத், தம்மிடம் வரச்செய்ய வொட்டாது தாமே சென்று கண்டு வணங்க வேண்டும் என்பது தற்போத மற்ற அன்பின் பெருக்கு. நாயனாரை வணங்க வந்ததேயன்றிக் கோயில் தாபரம் காண அரசன் எண்ணி வந்தானல்லன்; இது திருவருட் குறிப்பு.
எழு காதல் - மேன்மேல் பொங்கும் பெருவிருப்பம்.
சூழல் - கூட்டம்; செறிவு - இடம்; தண்டலை - சோலைகள்.