திருவார்ந்த செம்பொன்னி னம்பலத்தே நடஞ்செய்யும் பெருமானை யடிவணங்கிப் பேரன்பு தலைசிறப்ப உருகாநின் றுளங்களிப்பத் தொழுதேத்தி யுறையுநாள் வருவாய்மை மறையவர்க்கு மாளிகைகள் பலசமைத்தார். | 16 | (இ-ள்) திருவார்ந்த.....வணங்கி - சைவமெய்த்திருவே மிக்க செம்பொற்றிரு வம்பலத்திலே திருநடம் செய்தருளுகின்ற இறைவரை அடிவணங்கி; பேரன்பு....உறையுநாள் - பேரன்பு மேன்மேலோங்க மனமுருகி மகிழ்ச்சியடையத் தொழுது துதித்து அங்குத் தங்கும் நாளிலே; வருவாய்மை......சமைத்தார் - வாய்மையொழுக்கத்தில் வருகின்ற தில்லைவாழந்தணர்களுக்கு உறையுளாகிய திருமாளிகைகள் பலவற்றையும் எடுப்பித்தார். (வி-ரை) திரு - சைவமெய்த்திரு; முத்தித்திரு; தலைசிறத்தல் - மிக்கோங்குதல்; உளம் உருகா நின்று களிப்ப என்க; உருகா நின்று - உருகி; உறையுநாள்....சமைத்தார் - தில்லையில் செங்கண்ணார் பலகாலம் தங்கி யிறைவரை வழிபட்டிருந்தனர் என்பதாம்; தானங்கள் பல சமைத்தார் - (4210) என்று கூறியபடியே ஈண்டும் “மறையவர்க்கு மாளிகைகள் பலசமைத்தார்Ó என்றார், “நாமிவரிலொருவர்Ó என்று இறைவரால் அருளிச் செய்யப்பெற்ற சிவத்திருப் பண்புடையார்கள் இத் தில்லைவாழந்தணர்களாதலின், இவர்கள் உறையும் திருமாளிகைகள் “கற்றாங் கெரியோம்பும்Ó சிறப்பினால் சிவனுறையும் தானங்களோ டொப்ப எண்ணப்படும் சிறப்புடையன என்ற குறிப்புத்தருதற்கு; இச்செய்தி “நல்ல வம்புமலர்த்தில்லை யீசனைச் சூழ மறைவளர்த்தான்Ó என்ற வகைநூலின் ஆதரவுபெற்று அதனை விரித்துரைத்தபடியாம். வாய்மை வருமறையவர் என்க. தில்லைவாழந்தணர்கள். வாய்மையின் வருதலாவது சத்தாகிய தத்துவ நெறியில் வழிவழி ஒழுகிவருதல். (354 - 356) முதலியவை பார்க்க. எனவே இவையும் சிவன் றிருத் தொண்டாகப் போற்றப்பட்டன. தலைசிறக்க - சிறந்தோங்க. |
|
|