முட்டின் மீன்கொலைத் தொழில்வளத் தவர்வலை முகந்து பட்ட மீன்களி லொருதலை மீன்படுந் தோறும் “நட்ட மாடிய நம்பருக்Ó கெனநளிர் முந்நீர் விட்டு வந்தனர் விடாதவன் புடனென்றும் விருப்பால். | 11 | (இ-ள்) முட்டில்....மீன்களில் - குறைதலில்லாத மீன்களைப்படுத்து அக்கொலைத் தொழிலினது வளத்தையுடைய பரதவர் வலைகளால் வாரி எடுத்தலினாற் பட்ட மீன்களில்; ஒருதலை மீன் படும் தோறும் - ஒரு தலைமையாகிய மீன் படுந்தோறும்; நட்டமாடிய நம்பருக்கென - இஃது, ஐந்தொழிலருட் கூத்தாடும் ஐயருக்காகுக என்று; விடாத அன்புடன் - இடையறாத அன்பினாலே; விருப்பால் - விருப்பத்துடன்; நளிர் முந்நீர் என்றும் விட்டு வந்தனர் - குளிர்ந்த கடலினிடத்தில் நாடோறும் விடுத்துவந்தனர். (வி-ரை) முட்டில் மீன் - கடலின் மீன்களுக்கு எப்போதும் குறைவில்லை யாதலின் முட்டில் என்றார். கொலைத் தொழில் - மீன்களை நீரினின்றும் வலைப்படுத்துப் பிடித்து எடுத்தலேயின்றி அவற்றைக் கொல்லுதல் இல்லை; அவை தாமாக இறந்துபடுகின்றன; ஆதலின் கொலைப் பழியாகிய பாவச் செயலில்லை யாதலின் அவற்றை உண்ணலாம் என்னும் புத்த சமணக் கொள்கைகளை மறுத்துக் கூறியவாறு; அவற்றை நீரினின்றும் எடுத்தலே கொலை செய்தலாகும் என்பது முன்னரும் “பரிவுறத் தடிந்த பன்மீன்Ó (73) என்றார். வளம் - செல்வம் “வளம்பட வேண்டாதயார்Ó (நாலடி.) பட்ட - படுத்த; அகப்படுத்த; தலைமீன் - தலைமையாகிய - உயர்ந்த - சிறந்த; தமது பொருள்களுட் சிறந்தவற்றையே சிவனுக்காக்குதல் வேண்டும் என்பது சிவாகம விதி; அரிவாட்டாய நாயனார் வரலாறு முதலியவை காண்க. “விரும்பின கொடுக்கை பரம்பரற்கென்றுÓ (11 - திருமுறை - இடைமருது - மு - கோ - 28). நம்பருக்கென - நம்பருக்கு இது ஆகுக என்று நிவேதித்து. படுதோறும் - மீன்படுத்த நாட்களிளெல்லாம்; என்றும் - நாடோறும்; விட்டுவந்தனர் - விடாத - முரண் அணி; அன்புடன் - தலைமீன் - விட்டுவந்தனர் - என்று கூட்டுக. வலை - வலையினால்; முகந்து - முகக்க; முகத்தலால்; முகத்தல் - பிடித்தல் - கவர்தல். |
|
|