பக்கம் எண் :


52திருப்புகழ் விரிவுரை

இறைவனையடைந்தோர் குறைவிலா நிறைவு பெறுவர். தருணத்தில் உதவும் தயாநிதியாகப் பரம கருணாநிதியைப் புகழ்தல் வேண்டும். அவனைப் புகழ்ந்த வர்கள். உலகில் பொன்றாத புகழைப் பெறுவார்கள். அவர்கள் பூதவுடல் மாய்ந்தும், மாயாதவர்களாகிய நிலமிசை நீடு வாழ்வார்கள்.

கிழவோனே:-

கிழவன்-உரியவன். வள்ளிக்கு உரியவன். வள்ளிப்பிராட்டியை எம்பெருமான் கிழவடிவு காட்டிச் சென்று மழவடிவுடன் மணந்தான்.

    “மறவர் பொருப்பில் ஒருத்தி பொருட்டனாள் இள
     வடிவ முழுக்க நரைத்த விருத்த வேதியன்”

                                    -திருவகுப்பு (6)

அருளாளா:-

இறைவனுடைய அருள் அகில உலகங்களை ஆளுகின்றது. இறைவன் அவ்வருளை ஆளுகின்றனன்: அதனால் அப்பரமனை அருளாளன் என்று ஆன்றோர் புகழ்வர்.

    “பித்தா பிறைசூடி பெருமாளே அருளாளா” -தேவாரம்

கருத்துரை

வள்ளிமணவாளா! சூரனை வென்ற வீரா! அருளாளா! ஆவினன்குடியப்பா! மாதராசை நீங்கி நின்னை அடியேன் புகழ்வேன்.

9

கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக்
  காதல் நெஞ்சயரத்                    தடுமாறிக்
கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க்
  காய மொன்று பொறுத்                தடியேனும்
தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச்
  சாப மொன்றுநுதற்                 கொடியார்தம்
தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத்
  தாழ்வ டைந்துலையத்               தகுமோதான்