பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 11

அருகருகிருந்து கூடுமிடமிடமிதென்று சோர்வு படையாதே :-

தனவந்தருடைய அருகில் சென்று நல்ல இடம் நல்ல இடம் என்று நினைத்து நடந்து நடந்து தளர்ச்சியுறுவார்கள்.

இசையொடு புகழ்ந்தபோது நழுவிய ப்ரசண்டர் :-

இசையுடன் பாடினாலும், அவ்வுலோபியர் மெல்ல நழுவிச் சென்று மறைவார்கள்.

வாசல் இரவுபகல் சென்று வாடி உழல்வேனோ?:-

தானதருமம் கனவிலுமறியாத வஞ்சக லோபியருடைய வீடுகள் தோறும் இரவு பகலாகச் சென்று சென்று அலைவது கூடாது.

அடவொடுலகங்கள் யாவும் உதவி நிலைகண்ட பாவை :-

அகில வுலகங்களை யீன்று காத்தருள்பவர் உமாதேவியார்.

“அகிலதலம் பெறும் பூவை சக்தி யம்பை”
                                                   -(தமரகுரங்களும்) திருப்புகழ்.

“பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
    காத்தவளே”                                           -அபிராமி அந்தாதி

“உதர கமலத்தினிடை முதிய புவனத்ரயமும்
   உகுமுடிவில் வைக்கும் உமையாள்”               -திருவகுப்பு

கருத்துரை

சுவாமிமலை மேவும் உமை மைந்தரே! எம்மை உலோபிகளிடம் உழலாமல் காத்தருள்.

4

  இருவினை புனைந்துஞான விழிமுனை திறந்துநோயி
                   னிருவினை யிடைந்து போக                    மலமூட
         இருளற விளங்கியாறு முகமொடு கலந்து பேத
                   மிலையென இரண்டு பேரு                     மழகான
   பரிமள சுகந்தவீத மயமென மகிழ்ந்துதேவர்
                   பணியவிண் மடந்தை பாத                   மலர்தூவப்