பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 145

34

வார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழை
                காதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடு
                வாயிதழ் பொற்கம லர்க்குமி ழொத்துள    துண்டக்ரீவ
      வார்கமு கிற்புய நற்கழை பொற்குவ
                டாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணை
                மார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர   ரம்பைமாதர்
காருறும் வித்திடை யிற்கத லித்தொடை
                சேரல்குல் நற்பிர சத்தட முட்கொடு
                கால்மறை யத்துவ ளச்செறி பொற்கலை யொண்குலாவக்
      கார்குயி லைக்குர லைக்கொடு நற்றெரு
                மீதில்நெ ளித்துந கைத்துந டிப்பவர்
                காமனு கப்பம ளிச்சுழல் குத்திரர்              சந்தமாமோ
சூரர்ப தைக்கர வுட்கிநெ ளித்துய
                ராழியி ரைப்பநி ணக்குடலை லைக்கழு
                குழந ரிக்கெரு டக்கொடி பற்பல                சங்கமாகச்
      சூழ்கிரி யைக்கைத டித்தும லைத்திகை
                யானையு ழற்றிந டுக்கிம தப்பொறி
                சோரந கைத்தயி லைக்கொடு விட்டருள் செங்கைவேலா
ஏரணி நற்குழ லைக்கக னச்சசி
                மோகினி யைப்புணர் சித்தொரு அற்புத
                வேடமு தச்சொரு பத்தகு றத்திம ணங்கொள்வோனே
      ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு
                வாமிம லைப்பதி நிற்குமி லட்சண
                ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள்              தம்பிரானே

பதவுரை

சூரர்பதைக்க-சூராதி அவுணர்கள் பதைக்கவும், அரவு உட்கி நெளித்து- ஆதிசேடன் அஞ்சி நெளியவும், உயர் ஆழி நிரைப்ப-பெரிய