பக்கம் எண் :


148 திருவேரகம் (சுவாமிமலை)

விரிவுரை

இத்திருப்புகழில் முதல் நான்கு அடிகளிலும் பொது மாதர்களின் அவயவங்களைப் பற்றிக் கூறியுள்ளார். ஐந்து ஆறாவது அடிகளில் சூரபன்மனைப் போர்க்களத்தில் வென்றதைக் கூறியுள்ளார்.

காருறும் வித்து:-

கார், உறும், வித்து என்று பதப்பிரிவு செய்க. கார்-மேகம், உறும்- போன்ற, வித்து-மின்னல்.

சூரர்பதைக் கரவுட்கி:-

சூரர் பதைக்க, அரவு, உட்கி என்று பதப்பிரிவு செய்க.

சூரர் பதைக்க-சூராதி யவுணர்கள் பதைக்க, அரவு-ஆதிசேடன், உட்கி- அஞ்சி நெளிய.

ஏரணி நற்குழலை:-

அழகு நிறைந்த நல்ல அளகபாரத்தை உடையவள். பெண்களுக்குக் கூந்தலின் அழகு நிறைந்தது.

சசிமோகினி:-

சசி-இந்திராணி, மோகினி-இந்திராணி வளர்த்த தேவயானை.

அமுதச் சொருபத்து:-

வள்ளிப்பிராட்டி அமுத வடிவானவர்.

ஏரக வெற்பெனும் அற்புதமிக்க சுவாமிலை:-

திருவேரகம் என்ற தலமே சுவாமிமலை என்று அறிக.

கருத்துரை

வேலாயுதரே! சுவாமிமலை யண்ணலே! பொது மாதரின் நட்பு அற அருளுவீர்.

35

மருவே செறித்த குழலார் மயக்கி
                மதனா கமத்தின்                             விரகாலே