பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 17

 

மருவி மனமகிழ்ந்தருள் கூர:-

விநாயகர் முருகரிடம் அமர்ந்து மிக்க அன்புடன் தழுவி மகிழ்கின்றார். முருகவேள் அருள் புரிகின்றார்.

கருத்துரை

திருக்கயிலை மேவும் சிவகுமாரா! உன் திருவடி தருவாய்.

4

       புமியதனிற்                                                            ப்ரபுவான
          புகலியில்வித்                                                      தகர்போல்
      அமிர்தகவித்                                             தொடைபாட
               அடிமைதனக்                                            கருள்வாயே
      சமரிலெதிர்த்                                                         தசுர்மாளத்
           தனியயில்விட்                                        டருள்வோனே
      நமசிவயப்                                                                   பொருளோனே
         ரசதகிரிப்                                                          பெருமாளே.

பதவுரை

சமரில் எதிர்த்த=போர்க்களத்தில் எதிர்த்து வந்த, சூர்மாள=சூரபன்மன் மாண்டொழிய, தனி அயில்=ஒப்பற்ற வேற்படையை, விட்டு அருள்வோனே=ஏவி அருளியவரே! நமசிவாய பொருளோனே=”நமசிவய” என்ற தூல ஐந்தெழுத்தின் மெய்ப்பொருளாக விளங்குபவரே! ரசதகிரி=வெள்ளி மலையாகிய திருக்கயிலை மலையில் எழுந்தருளியுள்ள, பெருமாளே=பெருமையின் மிக்கவரே! புமி அதனில்=இப் பூமண்டலத்தில், ப்ரபு ஆன=தனிப் பெருந்தலைவராக விளங்குபவரும், புகலியில் வித்தகர் போல=சீர்காழிப் பகுதியில் திருவவதாரஞ் செய்தவருமாகிய ஞானசம்பந்தப் பெருமானைப் போல், அமிர்த கவி தொடை பாட=இறப்பை நீக்கி மரணமிலாவாழ்வினை வழங்கும் தேவாரப் பாடலைப் போல் அடியேனும் பாடுமாறு, அடிமை தனக்கு=தேவரீருடைய அடிமையாகிய நாயேனுக்கு, அருள்வாயே=திருவருள் புரிவீர்.

பொழிப்புரை

போர்த்தலத்தில் எதிர்த்து வந்த சூரபன்மன் மாயுமாறு இணையில்லாத ஞானசக்தியை விடுத்தருளிய விமலரே! “நமசிவய” என்ற பஞ்சாக்கரத்தின் உட்பொருளாக விளங்குபவரே! வெள்ளியங்கிரியில் எம்மை உய்விக்கும் பொருட்டு எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே! பூமண்டலத்தின் தனிப்