பாவை மண மென மருவி :- சிறுமியர்கள் சிறு பிராயத்தில் பொம்மைக் கல்யாணம் புரிந்து மகிழ்வர். அதுபோல் இறைவனை யடைகின்ற முழு பக்குவம் இல்லையெனினும், பாவைக்குத் திருமணம் செய்து அச்சிறுமியர் மகிழ்வது போல் சிறியேன் இறைவனுடன் ஒன்றி இன்புறுவேன். திரிபுரமொயித் தீயி னகைமேவி :- திரிபுரம் என்பது மும்மலத்தைக் குறிக்கும். அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் முப்புர மாவது மும்மல காரியம் அப்புரம் எய்தமை யாரறிவாரே. -திருமந்திரம் ஆணவம் கன்மம் மாயை என்ற மூன்று மலங்களும் வெந்து பொடியாகுமாறு ஞானமாகிய தீப்பொறி சிந்தச் சிரித்தல். இருவினை பொரிய:- பிறவிக்குக் காரணம் வினை. வினை நல்வினை, தீவினை எனப்படும். உணவு விளைகின்ற இடம் வயல். வயல், நன்செய், புன்செய் என்ற இரு பிரிவினையால்தான் பிறவித் தொடர் விடாது சூழ்ந்து வருகின்றது. “விதிகணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்ழல் என்றருள்வாய்” -அநுபூதி நல்வினை-பொன்விலங்கு தீவினை-இரும்பு விலங்கு. இரண்டும் விலங்குதானே. ஆதலால் ஞானத் தீயினால் இந்த இரு வினைகளும் எரிந்து, பொரிந்து, கரிந்து சாம்பராகுமாறு செய்துவிட்டால் பிறப்பு நீங்கிவிடும. “தாவரும் இருவினைச் செற்றுத் தள்ளரும் மூவகைப் பகையரண் கடந்து முத்தியில் போவது புரிபவர்” -கம்பர். “இருவினைமு மலமமுற இறவியொடு பிறவியற ஏகபோகமாய் நீயுநானுமாய் இறுகும் வகை பரமசுகம் அதனையருள் இடைமருதில் ஏகநாயகா” -(அறுகுநுனி) திருப்புகழ். |