ஆன்மாக்கள் செய்யும் பிழைகளைப் பொறுத்து அருள் புரிகின்ற பரமகருணையுடையவன் ஆதலின் பித்தன் எனப்பெற்றான். மகன்செய்த குற்றங்களை யெல்லாம் பொறுத்து வாழ்த்தும் தாயைக் கண்டு, “பெற்ற மனம் பித்து, பிள்ளைமனங் கல்லு” என்று கூறும் பழமொழியாலும் உணர்க. இதத்து மாகுடிலைப் பொருள் , , , , , குருநாதா:- சனகாதி முனிவர்கட்குக் கல்லாலின்புடையமர்ந்து எல்லாமாய் அல்லவுமாய் இருந்ததனை இருந்தபடி யிருந்து காட்டிச் சொல்லாமல் சொன்னவராகிய குருதட்சிணாமூர்த்தி, “சமர்த்தனே! குழந்தாய்! இனிய பிரணவப் பொருளைச் சொல்” என்று துதி செய்து கேட்டருளினார். ஆதலின் குருவுக்குங் குருவாதலின் ஆதிகுருப்புகழ் மேவுங் கொற்றவன் முருகன். சமப்ரவீண:- சமப்ரவீணன்-நிபுணன். ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐம்பெருந் தொழில்களை விளையாட்டாக எளிதில் புரிகின்ற ஆற்றலுடையவன். மதித்திடு புத்தியில் இரக்கமாய் வருதற்பர:- இறைவன் தன்னையுணர்ந்து உணர்வுமயமாய் நிற்கும் அடியவரது அறிவில் கலந்து விளங்குவான். “கற்றிடும் அறியவர் புத்தியிலுறைபவ” -திருப்புகழ். “அறிவொன் றறநின் றறிவா ரறிவில் பிறிவொன் றறநின் றபிரா னலையோ” -அநுபூதி. சகத்ரயோக:- யோகத்தில பல வகையுண்டு. ஹடயோகம், ஆலம்ப யோகம், நிராலம்பயோகம், ஆதாரயோகம், நிராதாரயோகம், மந்திரயோகம், கர்மயோகம், பக்தியோகம், ராஜயோகம் என்பன வாதி அநேகம். இவற்றுக்கெல்லாம் மேலான சிவ யோகத்தினை உணர்த்தும் ஞானகுரு முருகன். தக்ஷிண குருநாதா:- தென்னாட்டில் அப்பரமபதியாகிய முருகனையுணர்ந்து வழிபடுவார் பலர். அகத்தியர், சிகண்டி, நக்கீரர், அருணகிரிநாதர், குமரகுருபரர், சிதம்பர சுவாமிகள், இராமலிங்க அடிகள், |