பக்கம் எண் :


382 திருப்புகழ் விரிவுரை

 

மெள்ளச் சரோருகங்கள் பயில் நாதா:-

சரவணப் பொய்கை கங்கையாற்றின் ஒரு புடை விளங்குவது.

பொய்கை-இயற்கையாயமைந்த நீர்நிலை.

தடாகம்-செயற்கையாகத் தடுத்து உண்டாக்கியது.

கங்கையாறு சேறில்லாதது. ஆதலால் “அள்ளற்படாத கங்கை” என்றார்.

தெய்வீகமாய சரவணப் பொய்கையில் எம்பிரான் தெய்வத் தாமரை மலர்மீது எழுந்தருளினார்.

      “வெறிகமழ் கமலப் போதில் வீற்றிருந்தருளினானே”                                                         -கந்தபுராணம்.

      “உதயரவி வர்க்க நிகர் வனகிரண விர்த்தவித
          முடையசத பத்ரநவ பீடத்து வாழ்பவனும்”
                                            -வேடிச்சி காவலன் வகுப்பு.

வல்லைக்குமார:-

வல்லக்கோட்டை என்ற திருத்தலம். கோடை நகர் என விளங்குகின்றது.

இது சிங்கப் பெருமாள் கொயிலுக்கு வடமேற்கில் 10 கல் தொலைவில் உள்ள அருமையான க்ஷேத்திரம்.

மல்லுப்பொ ராறிண்டு புயவீரா:-

இறைவனுடைய புயம் வீரம் நிறைந்தது. அதனால் “ஆரிருதடந்தோள் வாழ்க” என்றார் கச்சியப்பர்.

“எதிர்படு நெடிய தருவடு பெரிய கடாமுமிழ்
          நாகமேக மிடிபட மற்பொரு
          திண்சிலம் படங்க மோதிப்பிடுங்கின “

      “அநுபவ னநக னனனிய னமல னமோகன
          நேக னேக னபிநவ னித்திய
          னஞ்சலென் ப்ரசண்ட வாகைப்புயங்களே”      -புயவகுப்பு.

கருத்துரை

வள்ளிமலையப்பனே! தீயவர் நட்பு தீர அருள் செய்வீர்.