தொள்ளைப் புலால் பை:- தொள்ளை-ஓட்டை. ஒன்பது ஓட்டைகளை யுடைய இறைச்சிப் பை. துள்ளிக்கனார் கயவு கோப கள் வைத்த தோற்பை:- துள் இக்கனார்; இக்கன்-கரும்பன் கரும்புவில்லையுடைய மன்மதன். மன்மதன் ஆன்மாக்களை மயக்கும் பொருட்டு துள்ளுவான். “துள்ளுமதவேள் கைக் கணையாலே” -திருப்புகழ். மன்மதனால் தளர்வு கோபம் முதலிய கள்ளை வைத்த தோற்பை. கள்-மயக்கத்தைத் தரும். கோபமும் மயக்கத்தைத் தரும். “கள்வைத்த தோற்பை சுமவாதே” -(ககனமும்) திருப்புகழ். பொள்ளுற்ற காற்பை:- பொள்ளென வேகமாகச் செல்லும் தசவாயுக்கள் குடிகொண்டிருக்கின்ற பை. “காயமேயிது பொய்யடா. காற்றடைத்த பையடா” என்பது சித்தர்வாக்கு. கொள்ளைத் துராற்பை:- துரால்-செத்தை. யமன் கொள்ளையடித்துக் கொண்டு போகின்ற செத்தை போன்ற உதவாத பை. பசுபாச அள்ளற்பை:- பசு-ஆன்மா. பாசம்-ஆணவம் மலம். இவைகட்கு இடமாய சோற்றுப்பை. அள்ளல்-சேறு. மாற்பை:- மால்-மயக்கம். மயக்கத்துக்கு இடமான பை. ஞெள்ளற்பை:- ஞெள்ளல்-தவறு. தவறுகட்கு இடமாய பை. சீப்பை:- சீ-சீழ்; சீ ஒழுகும் பை. “தோலெலும்பு சீநரம்பு பீளைதுன்று கோழை பொங்கு சோரிபிண்ட மாயுருண்டு வடிவான தூலம்” -திருப்புகழ். |