பக்கம் எண் :


390 திருப்புகழ் விரிவுரை

 

நல்வழியைத் தரிக்காத ஆறு சமயங்களின், ஒற்றுமைப்படாத பல பொருள்களையுடைய வழியில் செல்பவர்களான, வல்லரக்கர் போன்ற மூர்க்கர்களின் கல்விக் கலகத்துள் அழியலாமோ?

விரிவுரை

வெல்விக் குவீக்கு:-

குவிக்கும் என்ற சொல் சந்தத்தையொட்டி குவீக்கும் என வந்தது.

மன்மதன் முல்லைக் கணைகளையேவி உலகில் உள்ள மாந்தர்களை மயக்கிக் குவிக்கின்றான்.

முல்லைக்கை:-

அப்படி வென்று குவிக்கின்ற கணையாகிய முல்லை மலரை ஏந்திய கையையுடையவன் மன்மதன்.

வீக்கு வில்லிக்கதக் கருது வேள்:-

வீக்கு-நாண்பூட்டிய.

சுரும்பு நாண் பூட்டிய வில்லாகக் கரும்பு விலை விரும்பிக் கொண்ட மன்மதன்.

வில்லற்ற வாக்கொள் சொல்லற்றுகா:-

வில் அற்று அவா கொள் சொல் அற்று உகா.

வில்-ஒளி.

மன்மதனால் அறிவு ஒளி அற்றுப்போகும். ஆசை கொண்டு உரைக்கும் சொல்லும் அற்றுப் போகும்.

உகுதல்-சிந்துதல். மனம் நெகிழ்ந்து சிந்தும்.

பொய்யில்லத்துறா கவலைமேவு:-

பொய் வாழ்வு-நிலையற்ற வாழ்வு.

நிலையில்லாத வாழ்வுடைய வீட்டில் இருந்து சதா கவலையை யடைந்து மனிதர் மாய்கின்றார்கள்.

பல்லத்தி வாய்க்க:-

அத்தி-கடல். பலவகையான துன்பக் கடல்.

      “பல துன்பமு ழன்று கலங்கிய
                     சிறிய புலையன் கொலையன்புரி
                     பவ மின்று கழிந்திட வந்தருள் புரிவாயே”
                                          -(கனகந்திரள்) திருப்புகழ்.