பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 391

 

உணவுக் கவலை; பொருட் கவலை; மனைவி மகளால் கவலை, அரசினராற் கவலை; நோய் முதலியவற்றால் கவலை. இவ்வாறு பல கவலைகள்.

அல்லற் படாக்கை:-

அல்லல்படு ஆக்கை.

பல துயரத்தால் சோர்வு படுகின்ற உடம்பு.

நல்லிற் பொறாச் சமயமாறின்:-

நல்வழியில் சேராத ஆரு சமயங்கள் இவை புறச் சமயங்கள்.

பல்லத்த மார்க்கர் வல்லர்க்கர் மூர்க்கர்:-

அத்தம்-பொருள்.

ஒன்றோடொன்று ஒவ்வாது முரண்படுகின்ற பொருள்களைக் கூறும் சமய மார்க்கம். அதனைப் பின்பற்றுகின்ற, இரக்கமற்ற அரக்கரைப் போன்ற மூர்க்கர்கள்.

கல்விக் கலாத்தலையலாமோ:-

கலாம்-கலகம்.

கல்வியின் பயன் மனம் அடங்குவதேயாகும். அப்படியின்றி கற்ற கல்வியைக் கொண்டு தர்க்கமிட்டு, ஒருவருடன் ஒருவர் வாதிட்டுக் கெடுகின்ற தன்மையை ஒழிக்க வேண்டும்.

  “கலகலகலெனக் கண்ட பேரொடு
           கிலுகிடு சமயப் பங்கவாதிகள்
           கதறிய வெகு சொற் பங்கமாகிய பொங்களாவும்
      கலைகளும் மொழிய            -(அலகிலவு) திருப்புகழ்.

சமய வாதிகளைப் பற்றி சுவாமிகள் பல இடங்களில் கண்டிக்கின்றார்.

அல்லைகொல் வார்த்தை சொல்லிக்கி தோத்து சொல் குக்குடம்:-

தலைவனைப் பிரிந்திருக்கின்ற தலைவிக்கு இராப்பொழுது பெருந் துயரத்தைக் கொடுக்கும். ஒரு இரவு ஒரு யுகம் போலிருக்கும். இந்தப் பாழும் இரவு விடியாதோ? சூரியனைக் கடல் விழுங்கிவிட்டதோ? என்று கூறிப் புலம்புவாள்.