பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 417

 

யின் அன்பு விடாத மனமுடைய நல்ல அடியார்க்கு அடியேனும் சமமாகி உய்யும்படி உமது திருவருளைத் தந்தருளுவீர்.

விரிவுரை

அகத்தினைக் கொண்டு:-

அகம்-நான். நான் என்ற அகப்பற்று.

மற்றொன்றுற்றறியாது:-

அவ நெறியன்றி, மற்றச் சிவ நெறியை யடைந்து உய்ய அறியாது.

அவத்துள் வைக்கும்:-

அவம்-பயனற்றது. பயனில்லாத செயலில் வைப்பவன் மன்மதன்.

இகத்தை மெய்க் கொண்டு:-

மறுமையும் வீடுபேற்றையுங் கருதாமல், இம்மை வாழ்வே நிலைத்தது என்று கருதுவது மாந்தர் தொழில். இம்மை, மறுமை, வீடு என்ற மும்மையில் இம்மையே மெய்யென் றெண்ணி இடர்ப்படுகிறார்கள்.

பாலர்பொன் மயக்கல் உற்று:-

மனைவி, மைந்தர், பொன், பொருள் என்ற இவைகளைச் சதமென நினைத்து மயக்கமுறுவர் அறிவிலிகள். இவைகள் யாவும் ஒரு கணத்தில் அழிபவை.

       “நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
          புல்லறி வண்மை கடை”                   -திருக்குறள்.

அம்பற்றைவிடாது:-

சந்தத்தைக் குறித்து பகர மெய் மகர மெய்யாக வந்தது. பற்று விட்டாலன்றி பிறவி தொலையாது.

      “அற்றது பற்றெனில் உற்றது வீடு”              -நம்மாழ்வார்.

இளைப்பிரைப்பும் பித்தமுமாய் நரை முதிர்வாயே:-

இளைப்பு என்பது ஒரு நோய். இது காசத்தைச் சேர்ந்தது.

இரைப்பு-அதிகமாக மூச்சு விடுகின்ற நோய்.

பித்தம்-பாண்டு. மயக்க முதலிய துயரங்களைச் செய்கின்ற நோய்.