பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 425

 
91

ஓல மிட்ட கரும்பு தனா தனாவென
      வேசி ரத்தில் விழுங்கை பளீர் பளீரென
      வோசை பெற்ற சிலம்பு கலீர் கலீரென          விரகலீலை
 ஓர்மி டற்றி லெழும்புள் குகூ குகூவென
     வேர்வை மெத்த வெழுந்து சலா சலாவென
      ரோம குச்சு நிறைந்து சிலீர் சிலீரென            அமுதமாரன்
ஆல யத்து ளிருந்து குபீர் குபீரென
      வேகு திக்க வுடம்பு விரீர் விரீரென
      ஆர முத்த மணிந்து அளா வளாவென            மருவுமாதர்
 ஆசை யிற்கை கலந்து சுமா சுமாபவ
      சாக ரத்தி லழுந்தி எழா எழாதுளம்
      ஆறெ ழுத்தை நினைந்து குகா குகாவென      வகைவராதோ
மாலை யிட்ட சிரங்கள் செவேல் செவேலென
      வேலெ ழுச்சி தரம்பல் வெளேல் வெளேலென
      வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேலென   எதிர்கொள்சூரன்
 மார்பு மொக்க நெரிந்து கரீல் சுரீலென
      பேய்கு திக்க நிணங்கள் குமூ குமூவென
      வாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோவென    உதிரமாறாய்
வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீலென
      மாலை வெற்பு மிடிந்து திடீல் திடீலென
      மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாவென   விசைகள்கூற
 வேலெ டுத்து நடந்த திவா கராசல
      வேடு வப்பெண் மணந்த புயா சலாதமிழ்
      வேத் வெற்பி லமர்ந்த க்ருபா கராசிவ           குமரவேளே

பதவுரை

மாலையிட்ட சிரங்கள்=பூமாலையை யணிந்து கொண்டுள்ள (சூராதியருடைய) தலைகள் செவேல் செவேல் என=உதிரக் கொதிப்பால் சிலந்த நிறத்தை யடையவும், வேல் எழுச்சி தரும்பல்=வேலைப்போல் கூர்மையாகவுள்ள பற்கள், வெளேல் வெளேல்என=(உதிரத்துடன் கூடிய புலாலுணவால் சிவந்த அப்பற்கள்) வெண்ணிறத்தை யடையவும், வாகை பெற்ற புயங்கள்=வெள்ளி மாலையைச் சூடியுள்ள தோள்கள், கறேல் கறேல்